சிங்கப்பூரிலிருந்து தப்பிச் செல்ல உதவியவருக்குச் சிறை

சிங்கப்பூரிலிருந்து தப்பிச் செல்ல உதவியவருக்குச் சிறை

1 mins read
d58c6aa7-5d84-4a60-bc02-a271f204609b
-

சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் தப்­பிச் செல்ல உதவி குற்­றத்­துக்­காக ஆட­வர் ஒரு­வ­ருக்கு 11 மாதச் சிறை­யும் $20,000 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டுள்­ளன. அப­ரா­தத் தொகை­யைச் செலுத்த முடி­யா­மல் போனால் கூடு­தலாக ஒரு மாதம் சிறை­யில் இருக்க வேண்­டும்.

சிங்­கப்­பூ­ரில் நிகழ்ந்த ஆகப் பெரிய முத­லீட்டு மோச­டி­

ஒன்­றில் ஈடு­பட்­ட­தாக நம்­பப்­படும் வர்த்­த­க­ரான இங் யு சீ நாட்­டை­விட்டு தப்­பிச் செல்ல 37 வயது ஆல்­வின் வீ வெய்­சோங் உத­வி­னார். அதற்கு அவ­ருக்கு $50,000க்கும் $100,000க்கும் இடைப்­பட்ட ஒரு தொகை வழங்­கப்­பட்­டது.

இங் புரிந்த குற்­றம் தொடர்­பாக செய்­தி­களில் வெளி­யாகி இருப்­ப­தாக ஆல்வின் வீக்கு அவர் சார்­பா­கப் பணம் தந்த 32 வயது மார்­கஸ் ஃபாங் குவான் வெய் கூறி­யும் உதவி செய்­வதை வீ தொடர்ந்­தார்.

இந்­தக் குற்­றத்­து­டன் தொடர்­பில்­லாத சூதாட்­டக் குற்­றங்­கள் தொடர்­பாக விசா­ரணை நடத்­தி­ய­போது இங்­கைத் தப்­பிக்­க­வைக்க எடுக்­கப்­படும் முயற்­சி­யைப் பற்றி காவல்­து­றை­யி­ன­ருக்­குத் தெரி­ய­வந்­தது. அதை­ய­டுத்து, அந்­தத் திட்­டத்தை அதி­கா­ரி­கள் முறி­ய­டித்­த­னர்.

34 வயது இங், $1.2 பில்­லி­யன் பெறு­மா­ன­முள்ள நிக்­கல் உலோக வர்த்­த­கத் திட்­டத்­தில் மோசடி செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி­யன்று அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. அவர் மீது 75 குற்­றச்­சாட்­டு­கள் சுமத்தப் பட்டுள்ளன