'சிங்கே'யின் 50ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

'சிங்கே'யின் 50ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

1 mins read
e3b840c2-d768-45ca-b1ad-db7ef9fc0a34
'சிங்கே'யின் 50ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் பல்லினப் படைப்புகள் இடம்பெறும். சிங்கப்பூரின் நான்கு இனத்தவரின் திருமணங்களைச் சித்திரிக்கும் படைப்புகளைக் கொண்ட அங்கம் நிகழ்ச்சியில் இருக்கும். படம்: மக்கள் கழகம் -

தனது 50ஆம் ஆண்டு நிறை­வைக் கொண்­டா­டும் 'சிங்கே' ஊர்­வ­லம் அடுத்த மாதம் ஜூவல் சாங்­கி­யில் தொடங்­கும். ஒன்­றைரை மணி­நேரம் நடை­பெ­ற­வுள்ள இந்­நிகழ்ச்சி அடுத்த மாதம் 12ஆம் தேதி­யன்று நேர­டி­யாக இணை­யத்­தில் ஒளி­பரப்­பாகும் என்று பிர­த­மர் லீ சி­யன் லூங் தெரி­வித்­தார்.

"கோலா­க­ல­மாக அரங்­கே­ற­வுள்ள இவ்­வாண்­டின் நிகழ்ச்சி அனை­வ­ரும் சரி­ச­ம­மா­கக் கண்டு ரசிக்­கக்­கூ­டிய வகை­யில் அமை­யும். சாக­சங்­களும் 'ஃபுளோர் புரொ­ஜெக்­‌ஷன்ஸ்' எனும் தரை­யில் ஜொலிக்­கும் விளக்­குப் படைப்­பு­களும் இதை மறக்­க­மு­டி­யாத ஒரு நிகழ்­வாக உரு­வாக்­கும்," என்று திரு லீ ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டார்.

இவ்­வாண்டு நிகழ்ச்­சி­யில் பல்லின சமு­தா­யத்­தைப் பிர­தி­பலிக்­கும் படைப்­பு­கள் முக்­கி­யப் பங்கு வகிக்­கும். சிங்­கப்­பூ­ரின் நான்கு இனங்­க­ளின் திரு­ம­ணங்­க­ளைச் சித்­தி­ரிக்­கும் படைப்­பு­க­ளைக் கொண்ட அங்­க­மும் இருக்­கும்.