தெலுக் பிளாங்கா ரைஸ் வீட்டில் தீ; இருவர் பாதிப்பு

1 mins read
f9269397-b23d-4996-a662-001ef57e99a7
-

தெலுக் பிளாங்கா ரைஸில் உள்ள புளோக் 39ன் 10வது மாடி வீடு ஒன்­றில் நேற்று காலை நேரத்­தில் மூண்ட தீயில் இரண்டு பேர் காயடைந்­த­னர்.

தீ மூண்ட வீட்­டுக்கு நேரே மேலே இருந்த வீட்­டில் நினை­வற்றுக் கிடந்த ஒரு மாதுக்கு அதி­கா­ரி­கள் முத­லு­தவி சுவாச சிகிச்சை அளித்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

அவ­ரும் வேறு ஒரு­வ­ரும் மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டுசெல்­லப்­பட்­ட­னர். முன்­னெச்­ச­ரிக்கையாக ஏறத்­தாழ 280 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக படை தெரி­வித்­தது. தீ விபத்­துக்­கான கார­ணம் பற்றி புலன்­வி­சா­ரணை நடக்­கிறது.

இவ்­வே­ளை­யில், வெள்­ளிக்­கிழமை பின்­நே­ரத்­தில் இரண்டு மணி நேர இடை­வெ­ளி­யில் தெம்­பனிஸ், பிடோக்­கில் இரண்டு தீ விபத்­து­கள் நிகழ்ந்­தன.

தெம்­ப­னிஸ் அவென்யூ 5ல் உள்ள புளோக் 941ல் 10வது மாடி வீடு ஒன்று முற்­றி­லும் எரிந்­தது.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அதி­கா­ரி­கள் அந்த வீட்­டுக்­குள் நுழைந்து உள்ளே நினை­வற்­றுக் கிடந்த ஆட­வரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்­பி­வைத்­த­னர். ஏறக்­கு­றைய 180 பேர் அப்­புறப்­படுத்­தப்­பட்­ட­னர்.

பிடோக் நார்த் ஸ்தி­ரீட் 1ல் உள்ள புளோக் 204ல் இருக்­கும் ஒரு காப்­பிக்­க­டை­யில் நள்­ளி­ர­வில் மூண்ட தீயை இந்தப் படை அணைத்­தது.

வீடு­க­ளை­விட்டு வெளி­யேறி இருந்த பல­ருக்­கும் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.