ஆய்வு: சிறாரிடம் நன்றி உணர்வு மேம்பட்டால் மனச்சோர்வு குறையும்; மீள்திறன் கூடும்

ஆய்வு: சிறாரிடம் நன்றி உணர்வு மேம்பட்டால் மனச்சோர்வு குறையும்; மீள்திறன் கூடும்

2 mins read
429e926b-c5fd-47d5-8f3e-9af89f870de7
-

சிறார்­களை நன்றி பாராட்டுவோராக ஆக்­கு­வ­தன் மூலம் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள மனச்­சோர்வை போக்க முடி­யும் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

சிறார்­களை நன்­றியை வெளிப்­படுத்­தக்கூடிய செயல்­களில் ஈடு­படுத்­தி­னால் அவர்­க­ளு­டைய மீள்­தி­றன், நல்­வாழ்வு, மற்­ற­வர்­க­ளு­டன் அவர்­கள் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய உறவு ஆகி­யவை மேம்­ப­டு­கின்­றன என்­பது தேசிய கல்­விக் கழ­கத்தை சேர்ந்த ஆய்­வுகள் மூலம் வெளிப்­பட்டு உள்­ளது.

அதே­வே­ளை­யில், நன்­றியை வெளிப்­ப­டுத்­தக்கூடிய செயல்­களைச் செய்­வ­தன் மூலம் பதின்ம வய­தி­னி­ரி­டையே மனச்­சோர்வு அறி­கு­றி­கள் குறை­கின்­றன. மன­உளைச்­ச­லும் குறை­கின்­றன என்­பதும் அந்த ஆய்­வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த ஒன்­பது ஆண்டு காலத்­தில் மூன்று ஆய்வு­கள் நடத்­தப்­பட்­டன. அக்­கம்­பக்க பள்­ளிக்­கூ­டங்­க­ளைச் சேர்ந்த 13 முதல் 16 வய­து வரையுள்ள 500க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் ஆய்வு­களில் உள்­ள­டக்­கப்­பட்­ட­னர்.

வார அடிப்­ப­டை­யில் ஆறு முதல் எட்டு வார காலத்­திற்கு நன்­றியை வெளிப்­ப­டுத்­தக்கூடிய பல்­வேறு செயல்­களில் அவர்­கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­னர். பிறகு பல கேள்­வி­களுக்­குப் பதி­ல­ளிக்­கும்­படி சிறார்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர்.

முதல் ஆய்வு 2013 முதல் 2016 வரை நடந்­தது. மாண­வர்­க­ளிடம் மன­நி­றைவு மேம்­பட்டு இருந்­தது.

மனச்­சோர்வு அறி­கு­றிகள் குறைந்து இருந்­தன. பொது­வாக அவர்­க­ளின் நல்­வாழ்வு மேம்­பட்டு இருந்­தது அந்த ஆய்­வில் தெரி­ய­வந்­தது. சக­மா­ண­வர்­க­ளு­டன் கூடிய உற­வும் மேம்­பட்­ட­தாக மாண­வர்­கள் தெரி­வித்­த­னர்.

இரண்­டா­வது ஆய்வு 2015 முதல் 2018 வரை நடத்­தப்­பட்­டது. மனச்­சோர்வு அறி­கு­றி­கள் அதி­க­ரிப்­பதை தடுப்­ப­தில் நன்றி பாராட்­டும் செயல்­கள் ஆற்­றல்­மிக்­க­வை­யாக இருந்­தன என்­பது தெரி­ய­வந்­தது.

மூன்­றா­வது ஆய்வு 2017 முதல் 2021 வரை நடந்­தது. பல்­வேறு கேள்வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கும்­படி மாண­வர்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­னர். மாண­வரி­டையே மன­உளைச்­சல் குறைந்­த­தும் பள்ளிக் கூட மீள்­திறன் அதி­க­மாகியதும் இந்த ஆய்வு மூலம் தெரி­ய­வந்­தது.

இத­னி­டையே, இது பற்றி கருத்து கூறிய தேசிய கல்­விக் கழ­கத்­தின் மூத்த ஆய்வு அறி­வியல் அறி­ஞர் டாக்­டர் இமல்டா கேலியன், ஆய்வு முடி­வு­கள் பொது­வாக முரணற்­ற­வை­யாக இருக்­கின்­றன என்­ப­தால் அவை முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­வை­யாக உள்­ளன என்றார்.

இவர் கடந்த ஒன்­பது ஆண்டு கால­மாக இளை­யர்­க­ளி­டையே நன்றி உணர்வு பற்றி ஆராய்ந்து வரு­கி­றார்.