இரட்டையர் மரணம்: தந்தைக்கு மனநலப் பரிசோதனை

1 mins read
febab14f-7195-48f9-9331-125b4436f374
-

அப்­பர் புக்­கிட் தீமா­வில் உள்ள கால்­வா­யில் மாண்டு கிடந்த 11 வயது இரட்­டை­ய­ரின் தந்தை மன­

ந­லப் பரி­சோ­த­னைக்­காக சாங்கி சிறை வளா­கத்­தில் உள்ள மருத்­துவ நிலை­யத்­தில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளார்.

ஈதன் யாப் இ செர்­னைக் கொலை செய்­த­தாக 48 வயது சிங்­கப்­பூ­ர­ரான ஸேவி­யர் யாப் ஜுங் ஹோன் மீது கடந்த வாரம் குற்­றம் சாட்­டப்­பட்­டது. கடந்த மாதம் 21ஆம் தேதி­யன்று மாலை 4.23 மணிக்­கும் 6.25 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் கிரீன்­ரிட்ஜ் கிர­செண்ட்­டில் உள்ள சிறு­வர் விளை­யாட்டு மைதானத்­துக்கு அரு­கில் உள்ள கால்­வா­யில் தமது மகனை யாப் கொன்­ற­தாக நம்­பப்­ப­டு­கிறது. ஈதனைப் போலவே அவரது இரட்டைச் சகோதரரான ஏஷ்டன் யாப்பும் கால்வாயில் பேச்சுமூச்சின்றி காணப்பட்டார். இருவரும் மாண்டுவிட்டதாக சம்பவ இடத்தில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கு இம்மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.