கடத்தப்பட்டதாக நம்பப்பட்ட 21 வயது ஆடவர் ஹோட்டல் அறையில் தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டதை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மோசடிக்காரர்களின் மிரட்டல் களுக்கு அஞ்சி இந்தக் கடத்தல் நாடகத்தில் அவர் ஈடுபட்டதாக அறியப்படுகிறது.
அவர் கடத்தப்பட்டதாக நம்பி, அதிகாரிகளைப் போல பாசாங்கு செய்த மோசடிக்காரர்களிடம் அவரது குடும்பத்தினர் $560,000க்கும் அதிகமான தொகையை அனுப்பி வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

