போலித் தகவல் சமர்ப்பித்த இருவர் பிணையில் விடுவிப்பு

போலித் தகவல் சமர்ப்பித்த இருவர் பிணையில் விடுவிப்பு

1 mins read
75343810-388e-43b0-bb2b-dc13dfa280c2
-

கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பாக சுகா­தார அமைச்­சி­டம் போலித் தக­வல் சமர்ப்­பித்­த­தா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்ள தனி­யார் மருத்து ­வ­ரான 35 வயது ஜிப்­சன் குவா $20,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார். அவ­ரது உத­வி­யா­ள­ரான 40 வயது தாமஸ் சுவா செங் சூனும் அதே குற்­றச்­சாட்டை எதிர்­நோக்­கு­கி­றார். அவர் $15,000 பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்.

மெஹ்­ரா­ஜுன்­னிஷா என்­ப­வர் கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாதபோதி­லும் அவர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர் என அமைச்­சி­டம் குவா தெரி­வித்­த

தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான சான்­றி­தழை மெஹ்­ரா­ஜுன்­னிஷா பெற இவ்­வாறு செய்­யப்­பட்­ட­தாக அறி­யப்­ப­டு­கிறது.

கொவிட்-19 தடுப்­பூ­சிக்கு எதி­ரா­கக் கருத்­து­க­ளைத் தெரி­வித்த 'ஹீலிங் தி டிவைட்' அமைப்­பின் நிறு­வ­ன­ரான 46 வயது ஐரிஸ் கோ சூ சீ மீதும் மோச­டிக்

குற்­றச்­சாட்டு பதி­வா­கி­யுள்­ளது.