உட்லண்ட்ஸில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்றில் தீ மூண்டதால் சுமார் 50 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று மதியம் 1.25 மணியளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
உட்லண்ட்ஸ் டிரைவ் 75ல் உள்ள வீவக புளோக் 688எஃப்-ல் இச்சம்பவம் நிகழ்ந்தது. தீயணைப்பாளர்கள் சென்றபோது 14ஆம் மாடியில் உள்ள வீட்டின் படுக்கை அறையில் தீ மோசமாக எரிந்துகொண்டிருந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. யாரும் காயமடையவில்லை. தீக்கான காரணத்தை அறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

