சிங்கப்பூர் ஆயுதப் படை, 'த ஸ்டார் விஸ்டா கடைத் தொகுதியில் இரவு நேர பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சியை நடத்தியுள்ளது.
போன விஸ்டா வட்டாரத்தில் உள்ள அந்தக் கடைத் தொகுதியில், திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை அந்தச் சிறப்புப் பயிற்சி இடம்பெற்றது. சிங்கப்பூர் ஆயுதப் படையின் சிறப்புச் செயலாக்கப் பணிக் குழுவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பயிற்சியில், சிங்கப்பூர் ஆகாயப்படையின் H225M (ஹெச்225எம்) ரக ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டன.
'ஏர்பஸ்' நிறுவனத் தயாரிப்பு களான அந்த ஹெலிகாப்டர்கள் சிங்கப்பூர் ஆயுதப் படையின் பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பயன் படுத்தப்படுபவை.
மருத்துவத் தேவைக்காக வெளியேற்றுதல், தேடல்-மீட்புப் பணிகள், மனிதநேய உதவி, பேரிடர் நிவாரணம், கடல்துறைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவையும் அவற்றுள் அடங்கும்.
'த ஸ்டார் விஸ்டா' கடைத் தொகுதியில் இடம்பெற்ற பாவனைப் பயிற்சியில் நகர்ப்புறச் சூழலில் பிணைப் பிடிப்பைக் கையாண்டு, விரைந்து மிரட்டல்களைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதப் படையின் தயார்நிலையைச் சோதிப்பதும், பல்வேறு அச்சுறுத்தல்களைக் கையாளும் திறனை வலுப்படுத்துவதும் அந்தப் பயிற்சியின் இலக்குகள். கொவிட்-19 பரவிவரும் சூழலிலும், சிங்கப்பூர் ஆயுதப் படை அதன் பயிற்சிகளைத் தொடர்வதாகத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். சிங்கப்பூரின் இறை யாண்மை, பாதுகாப்பு ஆகியவற்றைக் கட்டிக்காப்பதற்கு ஏற்ற தயார்நிலையில் எப்போதும் இருப்பதை உறுதிசெய்வது அதன் நோக்கம் என்றார் அவர்.