கட்டுமான வேலைகளின் தாமதத்தை தவிர்க்க ஒப்பந்தக்காரருக்கு உதவும் வகையில் லஞ்சம் பெற்றதற்காக பொறியாளருக்கு 22 வார சிறைத் தண்டனையும் $4,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான 60 வயது சுவா காய் குவாட், 2017ஆம் ஆண்டு மார்ச், ஜூலை மாதங்களில் இரண்டு முறை மொத்தம் $4,500 லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.
அச்சமயத்தில் சிபிஜி கன்சல்டன்ட் நிறுவனத்தில் பொறியாளராக இருந்த சுவா காய் குவாட், தாமன் ஜூரோங்கில் ஒரு முதியோர் இல்ல கட்டுமானத் தளத்தில் இணைக்கப்பட்டிருந்தார் எனக் கூறப்பட்டது.

