புக்கிட் பாத்தோக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் அதன் ஓட்டுநர் மீது கவனக்குறைவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 14 பேர் காயம் அடைந்தனர். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி 5 மணியளவில் பேருந்து மோதி பக்கவாட்டில் சாய்ந்து விழுந்தது. சிங்கப்பூர் நாளேடுகளில் இந்த விபத்து தலைப்புச் செய்தியாக வெளியானது.
இந்தப் பேருந்தை ஓட்டியவர் சிங்கப்பூர் நிரந்தரவாசியான 66 வயது லூ எங் சாய். அவர் மீது நேற்று முறைப்படி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. கவனக்குறைவாக ஓட்டி அறுவருக்கு காயம் ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்களில் மற்றொரு பேருந்து ஓட்டுநரான முஹமட் சாலே மியான், 65, பாதசாரியான 57 வயது மோக்சன் ஆகியோரும் அடங்குவர்.
இதர நான்கு பேரும் 32 முதல் 68 வயது வரையிலான பயணிகள். திரு சாலேயின் பேருந்தில் பயணம் ெசய்தவர்கள்.
மேலும் எட்டுப் பேருக்கு காயம் விளைவித்ததாகவும் நேற்று திரு லூ மீது குற்றம்சாட்டப்பட்டது.
பத்து முதல் 70 வரையிலான இவர்கள் அனைவரும் திரு சாலேயின் பேருந்தில் பயணம் செய்தவர்கள். காயம் அடைந்த 14 பேரின் விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

