சாங்கியில் சரக்கு நிலவரம் சீரடைகிறது

சாங்கியில் சரக்கு நிலவரம் சீரடைகிறது

1 mins read
a85e29cf-9b86-45e0-ab8d-7e6631364764
இரு வாரங்களாக தேங்கிக் கிடந்த சரக்குகளை உரியவர்களிடம் சேர்க்கும் வேலையை சேட்ஸ் முடித்து வருகிறது. -

சாங்கி சரக்­குக் கிடங்­கு­களில் கடந்த இரு வாரங்­க­ளாக தேங்­கிக் கிடந்த சரக்­கு­க­ளின் நில­வ­ரம் சீர­டைந்து வரு­கிறது. இறக்­கு­மதி நட­வ­டிக்­கை­கள் வழக்கநிலைக்­குத் திரும்­பி­யுள்­ளன என்று சாங்கி விமான நிலைய களப்­ப­ணி­களை கையா­ளும் விமா­னச் சரக்கு நிறு­வ­ன­மான சேட்ஸ் நேற்று தெரி­வித்­தது.

இது­வரை தேங்­கிய சில சரக்­கு ­க­ளின் தொடர்­பில் எஞ்­சிய வேலை­கள் முடிக்கப்பட்டு வரு­வ­தா­க­வும் தற்­போது சரக்­கு­கள் வழக்கமான முறையில் கையா­ளப்­பட்டு வரு வதாகவும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு வெளி­யிட்ட அறிக்­கை­யில் சேட்ஸ் குறிப்­பிட்­டது.

சரக்­கு­களை எப்­போது பெற்­றுக் கொள்ள முடி­யும் என்­பதை தெரி­விக்க சில நாட்­கள் ஆக­லாம். அதற்­கான ஏற்­பா­டு­கள் விரை­வு ப­டுத்­தப்படு­கின்­றன என்­றது சேட்ஸ். ஊழி­யர்­களில் சிலர் கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­தால் மனி­த­வ­ளப் பற்­றாக்­குறையை சேட்ஸ் எதிர்நோக்கியது. சீனப் புத்­தாண்­டை­யொட்டி கூடுதலாக சரக்­கு­கள் வந்ததால் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த நெருக்­க­டி குறித்து ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு செய்தி வெளி­யிட்­ட­தைத் தொடர்ந்து இதர பிரி­வு­க­ளி­லி­ருந்து 40க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களை 'சேட்ஸ்' சரக்­குப் பிரிவுக்கு மாற்றி யது. வார விடு­மு­றை­யில் சென்­ற­வர்­கள் திருப்பி அழைக்கப்பட்டனர். தேங்­கிக் கிடக்­கும் சரக்­கு­கள் விரை­வில் சீர் செய்­யப்­படும் என்று கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சேட்ஸ் உறு­தி ­அ­ளித்­தி­ருந்­தது. இதற்­கிை­டயே தங்­க­ளு­டைய பொருட்­க­ளைப் பெற முடி­யாத சிலர் இழப்­பீடு கோரப் போவ­தா­கக் கூறி­யி­ருந்­த­னர். இதற்­குப்­ப­தி­ல­ளித்த 'சேட்ஸ்', காப்­பு­றுதி நிறு­வ­னங்­க­ளு­டன் ஆலோசனை நடத்தி கோரிக்­கை­கள் மதிப்­பீடு செய்­யப்­படும் என்று கூறியுள்ளது.