முன்னாள் அரசாங்க ஊழியர் மீது மானபங்கக் குற்றச்சாட்டு

முன்னாள் அரசாங்க ஊழியர் மீது மானபங்கக் குற்றச்சாட்டு

1 mins read
1dbb7cb0-16e9-479d-8724-edbbcd85eb17
-

சிங்­கப்­பூ­ரின் எல்­லைச் சாவ­டி­களில் செயல்­படும் அர­சாங்க அமைப்­பில் வேலை பார்த்த ஆட­வர், இரண்டு வெவ்­வேறு சம்­ப­வங்­களில், பணி யிடத்­தில் ஒரு பெண்ணை மான பங்­கப்­ப­டுத்­தி­ய­தா­கக் குற்­றம் சாட்டப்­பட்­டுள்­ளது.

அந்த 36 வயது ஆட­வர் மீது துன்­பு­றுத்­தல் குற்­றச்­சாட்டு ஒன்றும், மான­பங்­கக் குற்­றச்­சாட்­டு­கள் இரண்­டும் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

பாதிக்­கப்­பட்ட பெண்­ணின் அடை­யா­ளத்­தைக் காக்­கும் பொருட்டு ஆட­வ­ரின் பெயர் வெளி யிடப்­ப­ட­வில்லை.

சம்­பந்­தப்­பட்ட அர­சாங்க அமைப் பின் பெய­ரும் நீதி­மன்ற ஆவ­ணங் களில் தணிக்கை செய்­யப்­பட்டு உள்­ளது. ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு நேற்று அளித்த தக­வ­லில் ஆட­வர் சென்ற ஆண்டு பிப்­ர­வரி முதல் தேதியே வேலை­யி­லி­ருந்து வில­கி­விட்­ட­தாக அந்த அர­சாங்க அமைப்பு தெரிவித்தது.

அமைப்­பின் ஊழி­யர்­கள் வேலை யிடத் துன்­பு­றுத்­தல், முறை­யற்ற நடத்தை ஆகி­ய­வற்­றில் ஈடு­ப­டு­வதை அறவே பொறுத்­துக்­கொள்ள இய­லாது என்­றும் அவற்­றைக் கடு­மை­யா­கக் கரு­து­வ­தா­க­வும் அந்த அமைப்­பின் பேச்­சா­ளர் ஒரு­வர் கூறினார். அமைப்­பிற்­குள் முறை­யான தொழில்­மு­றைச் செயல்­பா­டு­களும் ஒழுங்­கு­மு­றை­யும் இருப்­பதை உறு­தி­செய்­யக் கடப்­பாடு கொண்டு இருப்­ப­தா­க­வும் அவர் சொன்­னார்.

தவ­றான நடத்­தை­யில் தொடர்­பு­டைய எந்­த­வொரு அதி­காரி மீதும் நட­வ­டிக்கை எடுக்­கத் தயங்க மாட்­டோம் என்­று பேச்­சா­ளர் சொன்னார்.