சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் சோதனை; 34 பேரிடம் காவல்துறை விசாரணை

சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் சோதனை; 34 பேரிடம் காவல்துறை விசாரணை

2 mins read
a526d99d-7189-44ad-8284-c6beffa2ce04
சட்டவிரோத சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் ரொக்கத்தையும் காவல்துறை கைப்பற்றியது. படம்: சிங்கப்பூர் காவல்துறை -

காவல்துறை வீசிய வலை­யில் சிக்­கிய 34 பேரி­டம் தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

சட்­ட­வி­ரோத கும்­பல்­களில் உறுப்­பி­ன­ராக இருந்­தது உட்­பட பல்­வேறு குற்­றச்­செ­யல்­களில் அவர்­கள் ஈடு பட்­டி­ருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது.

பிடோக் காவல் நிலைய தலை­மை­யின்கீழ் பல அர­சாங்க அமைப்பு களின் அதி­கா­ரி­கள் தீவு முழு­ வதும் ஜன­வரி 17 முதல் 21 வரை சோத­னை­களை நடத்­தி­னர்.

குற்­றப் புல­னாய்­வுத் துறை, மத்­திய போதைப்­பொ­ருள் ஒழிப்­புப் பிரிவு, சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம், சிங்­கப்­பூர் சுங்­கத் துறை, நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம், சிங்­கப்­பூர் உணவு அமைப்பு உள்­ளிட்ட அைமப்­பு­கள் இதில் பங்ேகற்­றன.

கேலாங்­கில் நடந்த சோத­னை­யில் 27 முதல் 34 வரை மூன்று பேர், சட்­ட­வி­ரோ­தக் கும்­பல்­க­ளு­டன் தொடர்­பி­ருக்­க­லாம் என்ற சந்­தே­கத்­தின்­பே­ரில் கைது செய்­யப்­பட்­ட­னர்.

மேலும் இரண்டு பேர் இரு­மல் மருந்து உள்­ளிட்ட பதிவு செய்­யப்­ப­டாத மருந்­து­கள் மற்­றும் பாலி­யல் உணர்­வு­க­ளைத் தூண்­டும் பொருட்களு­டன் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­க­ளி­ட­மி­ருந்து ஏறக்­கு­றைய 9,000 வெள்ளி மதிப்­புள்ள மின் சிக­ரெட்­டு­களும் அதன் உப­க­ர­ணங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

மற்­றொரு சோத­னை­யில் உபி அவென்யூ 3ல் உள்ள ஒரு கடை­யில் சட்­ட­வி­ரோத சூதாட்­டத்­தில் ஈடு­பட்ட ஒரு பெண் உட்­பட ஆறு பேர் கைதாகி­னர். அவர்­கள் 42 வயது முதல் 62 வரை­யி­லா­ன­வர்­கள். அவர்களி­ட­மி­ருந்து சூதாட்­டத்­துக்­குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட பொருட்­களும் $950 ரொக்­க­மும் கைப்­பற்றப் ­பட்­டன.

கேலாங் லோேராங் 22ல் உள்ள ஒரு ஓட்­ட­லை­யும் கேலாங் ரோட்­டில் உள்ள உடற்­பி­டிப்பு நிலை­யத்­தை­யும் காவல்துறையினர் சோத­னை­யிட்­ட­னர். இதில் குற்­றச் செயல்­களில் ஈடுபட்­ட­தாக நம்­பப்­படும் 32 முதல் 48 வயது வரை­யி­லான பத்து பெண்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

இந்­தச் சோத­னை­யில் கேலாங் ரோட்­டில் உரி­மம் இல்­லா­மல் கர­வாக்கோ பாணி­யில் செயல்­பட்ட 'கேடிவி' நிலை­யம் ஒன்றை போலி சார் கண்­டு­பி­டித்­த­னர்.

அங்கு மதுபானம் அருந்தி, பாட்­டுப் பாடிக் கொண்­டி­ருந்த 25 முதல் 47 வயது வரை ஐந்து ஆண்­களும் நான்கு பெண்­களும் சிக்­கி­னர்.

இவர்­களில் 65 வயது நபர், நிலை­யத்தை நடத்­தி­ய­தாக நம்­பப்­ப­டு­கிறது.

பொதுப் பொழு­து­போக்­குச் சட்­டம், மது­பா­னக் கட்­டுப்­பாட்­டுச் சட்­டத்தின்கீழ் இவர் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்.

வேறு ஒரு சோத­னை­யில் சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் சுங்­க­வரி கட்­டாத 30 சிக­ரெட் பெட்­டி­க­ளைப் பறி­மு­தல் செய்­த­னர்.

இதன் தொடர்பில் 78 வயது நபர் ஒரு­வர் விசாரணையின் கீழ் கொண்டு வரப்­பட்டு உள்­ளார். இதர இரண்டு பேருக்கு சுங்­க­வரி செலுத்­தாத சிக­ரெட்­டு­களை வைத்­தி­ருந்­த­தற்­காக 2,500 வெள்ளி வரை அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் கேலாங் லோரோங்குகளை பாது­காப்­பாக வைத் திருப்­ப­தற்கு இத்­த­கைய அம­லாக்க நட­வ­டிக்­கை­கள் அவ­சி­ய­மா­கிறது என்று கேலாங் அக்­கம்­பக்க காவல் துறை நிலை­யத்­தின் துணை சூப்ரின்டென்­டண்ட் லீ டிங் வெய் கூறி­யுள்­ளார்.

கேலாங் லோரோங்­கு­களில் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களைக் கண்டு­ பி­டித்து அவற்­றைத் தடுப்­ப­தற்காக சமூ­கத்­து­டன் காவல்­துறை தொடர்ந்து அணுக்­க­மா­கச் செயல் படும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.