கொவிட் 19: 10,175 தொற்றுச் சம்பவங்கள், 1,205 பேர் மருத்துவமனையில்

சிங்கப்பூரில் புதன்கிழமை (பிப்ரவரி 9) நிலவரப்படி தொற்றுப் பாதிப்பால் மொத்தம் 1,205 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 111 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஐந்தாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 1,194 பேர் தொற்றுப் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 10,175க்கு குறைந்தது.

ஒப்புநோக்க செவ்வாய்க்கிழமை, இந்த எண்ணிக்கை 12,971ஆக இருந்தது.

நேற்று பதிவான தொற்றுப் பாதிப்பில் 7,661 பேருக்கு ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.

எஞ்சிய 2,514பேருக்கு பல்படியத் தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.

கொவிட்-19க்கு மேலும் நால்வர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!