போக்குவரத்து மன்ற ஆய்வு: பேருந்து, ரயில் பயணியிடம் 2021ல் மனநிறைவு குறைந்தது

2 mins read
6dba49f6-49b3-44f2-b083-7102413dc8aa
-

சிங்­கப்­பூ­ரில் பேருந்து, ரயில் சேவைகள் தொடர்­பில் பய­ணி­களிடம் நில­வும் அதி­ருப்தி 2020ஆம் ஆண்டை­விட சென்ற ஆண்­டில் கூடி இருக்­கிறது.

பொதுப் போக்­கு­வ­ரத்து சேவை கள் மகிழ்ச்­சி­கரமானவை­யாக இருக்­கின்­றன என்று தெரி­வித்­த­வர்­க­ளின் விகி­தம் இர­ண்டா­வது ஆண்­டாக சென்ற ஆண்­டில் குறைந்­து­விட்­டது.

பய­ணி­க­ளின் தேவை­க­ளைச் சிறந்த முறை­யில் புரிந்­து­கொள்ளவும் மேம்­படுவதற்கான தேவை உள்ள துறை­களை அடை­யா­ளம் காண­வும் பொதுப் போக்குவரத்து மன்றம் ஆண்­டு­தோ­றும் பொதுப் போக்­கு­வரத்து பய­ணி­கள் மன­நி­றைவு ஆய்வை நடத்­து­கிறது. அதில் இந்த நில­வ­ரங்­கள் தெரியவந்­துள்­ளன.

மன்­றம், 15 வய­து, அதற்கு அதிக வய­தும் உள்ள 4,212 பயணி­களை உள்­ள­டக்கி இணை­யம் வழி சென்ற ஆண்டு அக்­டோ­பர் 11ஆம் தேதி முதல் டிசம்­பர் 3ஆம் தேதி­வரை ஆய்வு நடத்­தி­யது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக நேர­டி­யாக அல்­லா­மல் இணை­யம் வழி ஆய்வு நடத்­தப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரில் பொதுப் போக்­கு­வரத்து மன­நிறைவளிக்­கிறது என்று தெரி­வித்தவர்­க­ளின் அளவு 92% ஆக இருந்­தது. இது 2020ல் 97.6% ஆக­வும் 2019ல் 99.4% ஆக­வும் இருந்­தது.

இதற்கு முன்­ன­தாக 2015ல்தான் பய­ணி­கள் மன­நி­றைவு அளவு ஆகக்­கு­றை­வாக, அதா­வது 91.8% ஆக இருந்­தது. அதற்­குப் பிறகு சென்ற ஆண்­டில்­தான் அது மிகவும் குறைந்­துள்­ளது.

பேருந்து, ரயில் இரண்­டை­யும் ஒப்­பி­டு­கை­யில் சென்ற ஆண்­டில் பய­ணி­க­ளின் மன­நி­றை­வைப் பொறுத்­த­வரை, ரயில் சேவை­கள் சிறப்­பாக இருந்­தன. காத்­தி­ருக்­கும் நேரம்தான் பெரும் பிரச்­சினை என்­பது தெரி­ய­வந்­தது.

இதைப் பொறுத்­த­வரை பய­ணி­களில் 80.9% மட்­டுமே மகிழ்ச்சி தெரி­வித்­த­னர். இந்­தச் சங்­க­டம் பேருந்து பய­ணி­க­ளி­டையே அதிக மாக இருந்­தது. பேருந்து சேவை­கள் மன­நிறைவாக உள்­ள­தா­கக் கூறி­ய­வர்­கள் வெறும் 75.7%தான்.

பொதுப் போக்­கு­வ­ரத்­தின் நம்­பகத்­தன்மை, வசதி, பயண நேரம், வாடிக்­கை­யா­ளர் சேவை, பாது­காப்பு ஆகி­யவை தொடர்­பில் மன­நி­றைவு தெரி­வித்த பய­ணி­கள், 2020 ஆம் ஆண்­டை­விட சென்ற ஆண்­டில் குறை­வாக இருந்­த­னர்.

என்­றா­லும் கூட, வழங்­கப்­பட்ட சேவைத் தக­வல்­கள், பேருந்து முனை­யங்­க­ளுக்­குச் செல்­லும் வசதி­கள், பேருந்து நிறுத்­தங்­கள், எம்ஆர்டி ரயில் நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றைப் பார்க்­கை­யில் மன­நி­றைவு தெரி­வித்தவர்­கள் சென்ற ஆண்­டில் அதி­கம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பொறுத்­த­வரை, பெரும்­பா­லான பிரிவு­களில் சரா­சரி மன­நி­றைவு அளவு ஒப்­பிட்டுப் பார்க்­கை­யில் சென்ற ஆண்­டில் தொடர்ந்து சீராகவே இருந்து வந்­தது.

அதா­வது மன­நி­றை­வு­டன் கூடிய பய­ணி­கள் பொதுப் போக்­கு­வ­ரத்தை மிக உயர்­வா­ன­தாக கரு­து­கிறார்கள் என்பது இதன் மூலம் தெரிகிறது.

இந்­தச் சரா­சரி மன­நி­றைவு அளவு 2020, 2019 ஆகிய ஆண்டு­களைப் போலவே சென்ற ஆண்­டி­லும் 7.8 ஆக இருந்­தது.

இத­னி­டையே, இது பற்றி ஃபேஸ்புக்­கில் கருத்து கூறிய போக்கு­வ­ரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன், தொற்று கார­ண­மாக பல சவால்­களும் இடர்­களும் இருந்­த­போ­தி­லும் பொதுப் போக்கு­வரத்து ஊழி­யர்­கள் தங்­க­ளு­டைய சிறப்­பான பணியைத் தொடர்ந்து இடை­வி­டா­மல் செவ்­வனே நிறை­வேற்றி வரு­கி­றா­ர்கள் என்­ப­தையே இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டு­வதாக நேற்று தெரி­வித்­தார்.