தொற்று குறைவு; மருத்துவமனை நோயாளிகள் அளவு அதிகம்

தொற்று குறைவு; மருத்துவமனை நோயாளிகள் அளவு அதிகம்

1 mins read
fe4a4beb-e66f-43d7-9319-2f56055a3dac
-

சிங்­கப்­பூ­ரில் புதன்­கி­ழமை நில­வரப்­படி 1,205 பேர் மருத்­து­வ­மனை­யில் கொவிட்-19 தொற்­றுக்­குச் சிகிச்சை பெற்­று­வந்­த­னர். 30 நோயா­ளி­கள் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் இருந்­த­னர்.

மருத்துவமனைகளில் செவ் வாய்க்கிழமை நிலவரப்படி 1,194 கொரோனா நோயாளிகள் அனு மதிக்கப்பட்டு இருந்தனர்.

மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை, ஐந்­தா­வது நாளாக புதன்­கி­ழமையும் 1,000த்தைத் தாண்­டி­ய­தா­கவே இருந்­தது.

அதே­வே­ளை­யில், புதன்­கி­ழமை புதி­தாக தொற்றுக்கு ஆளா­ன­வர்­கள் எண்­ணிக்கை 10,175 ஆகக் குறைந்­தது. செவ்­வாய்க்­கி­ழமை இந்த எண்­ணிக்கை 12,791 ஆக இருந்­த­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

புதி­தாக தொற்­றுக்கு ஆளா­ன­வர்­களில் 2,514 பேருக்­கு பிசி­ஆர் பரி­சோ­தனை மூலம் தொற்று தெரி­ய­வந்­தது.

ஏஆர்­டி பரி­சோ­தனை மூலம் 7,661 பேருக்­குத் தொற்று இருந்தது­தெரியவந்­தது.

வெளி­நா­டு­களில் இருந்து வந்த 139 பேருக்­குத் தொற்று இருந்­தது. கொவிட்-19 காரணமாக புதன்­கி­ழமை நான்கு பேர் மர­ண­மடைந்­த­னர்.

வாராந்­திர தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் 2.0 ஆக இருந்­தது.

புதன்­கி­ழமை நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் கொரோனா தொற்­றுக்கு ஆளா­னவர்களின் மொத்த எண்­ணிக்கை 428,954 ஆகவும்­ மொத்த மரண எண்­ணிக்கை 881 ஆக­வும் இருந்­தது.

மக்­கள் தொகை­யில் முற்­றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் அளவு 93%. கூடு­தல் தடுப் பூசி (பூஸ்­டர்) போட்­டுக்­கொண்­ட­வர்­கள் 61% என்று அமைச்சு தெரி­வித்­தது.