பீஷான் ஸ்திரீட் 13ல் உள்ள புளோக் 172ன் பக்கத்தில் இருக்கும் திறந்தவெளி கார்ப்பேட்டையில் புதன்கிழமை இரவு ஒரு மோட்டார்சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அந்தத் தீயை அணைத்தது.
இரண்டு மீட்டர் உயரம் பற்றி எரிந்த மோட்டார்சைக்கிளுக்குப் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரும் பாதிக்கப்பட்டது. இருந்தாலும் அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
மோட்டார்சைக்கிள் எரிந்ததைக் காட்டும் டிக்டாக் காணொளி புதன்கிழமை இணையத்தில் பதிவேற்றப்பட்டது.
அந்தப் படத்தை எடுத்த டான் யிங் யு என்ற 17 வயது மாணவர், அந்த மோட்டார்சைக்கிளுக்கு அருகில் சென்றபோது திடீரென அது வெடித்துவிட்டதாகவும் அத்தகைய காட்சிகளைத் திரைப்படங்களில் மட்டுமே தான் பார்த்துள்ளதாக வும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். இந்தச் சம்பவம் பற்றி புலன்விசாரணை நடந்து வருகிறது.

