சிங்கப்பூர் சாலைகளில் செயல்படும் சில நுழைவாயில்களில் மின்னியல் சாலைக் கட்டணம் (இஆர்பி) வரும் திங்கட்கிழமை முதல் $1 கூடும். நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று இதனை அறிவித்தது.
ஆயர் ராஜா விரைவுச்சாலை, மத்திய விரைவுச்சாலையின் சில பகுதிகளில் வாகனப் போக்குவரத்தைச் சமாளிப்பதை இலக்காகக்கொண்டு இம்மாற்றம் இடம்பெறுகிறது.
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரியில் அதிக மக்கள் வேலைஇடங்களுக்குத் திரும்புகிறார்கள். இச்சூழலில் இந்தக் கட்டண உயர்வு நடப்புக்கு வருகிறது.
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் நகரை நோக்கி வரும்போது ஜூரோங் நகரமன்றத்தைக் கடந்ததும் மூன்று நுழைவாயில்களில் கட்டண மாற்றம் இடம்பெறும்.
காலை 8 மணி முதல் 8.30 மணி வரை கட்டணம் $1 ஆக இருக்கும். காலை 8.30 முதல் 9.30 மணி வரை $2 ஆக இருக்கும்.
ஆயர் ராஜா விரைவுச்சாலையில் துவாசை நோக்கிச் செல்லும் போது நார்த் போன விஸ்தாவை கடந்ததும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை $1 கட்டணம் வசூலிக்கப்படும்.
தெற்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் நான்கு நுழைவாயில்களில் காலை 9.30 மணிக்கும் காலை 10 மணிக்கும் இடையில் கட்டணம் $2.
வடக்கு நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலையில் இரு நுழைவாயில்களில் மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை $2 கட்டணம் வசூலிக்கப்படும். மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை கட்டணம் $3ஆக இருக்கும்.
இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை $1 கட்டணமாக வசூலிக்கப்படும்.

