கொவிட்-19க்கு எதிரான போரில் சிங்கப்பூரின் பங்களிப்புக்கு வலுசேர்க்கும் ஜென்ஸ்கிரிப்ட்

கொவிட்-19க்கு எதிரான போரில் சிங்கப்பூரின் பங்களிப்புக்கு வலுசேர்க்கும் ஜென்ஸ்கிரிப்ட்

1 mins read
005be4e6-b8c2-4768-9ada-4c93b6448226
ஜென்ஸ்கிரிப்ட் பயோடெக் நிறுவனத்தின் புதிய நிலையத்தில் ஆராய்ச்சிகள் நடத்தப்படும். படம்: ஜென்ஸ்கிரிப்ட் பயோடெக் நிறுவனம் -

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லை­க்கு எதி­ரான போரில் சிங்­கப்­பூ­ரின் பங்­க­ளிப்பை வலுப்­ப­டுத்த உல­க­ளா­விய உயிர்­தொ­ழில்­நுட்ப நிறு­வ­ன­மான ஜென்ஸ்­கி­ரிப்ட் பயோ­டெக் 30,000 சதுர அடி பரப்­ப­ளவு கொண்ட உற்­பத்தி நிலை­யத்தை நேற்று திறந்­தது. சொலா­ரிஸ்@காலாங்­கில் இந்­தப் புதிய நிலை­யம் இயங்­கு­கிறது.

இந்த நிலை­யத்தை அமைக்க $20.1 மில்­லி­யன் செல­வானது. மீண்­டும் இணைக்­கப்­படும் புர­தச்

சத்­து­க­ளை­யும் தொகுக்­கப்­பட்ட மர­ப­ணுக்­க­ளை­யும் நிலை­யம் உரு­வாக்­கும். இவை ஆய்­வு­களில் பயன்­ப­டுத்­தப்­படும். அது­மட்­டு­மன்றி புதிய தடுப்­பூசி, மருந்­து­கள் ஆகி­ய­வற்­றைத் தயா­ரிக்­க­வும் இவை பயன்­ப­டுத்­தப்­படும்.

இணை­யம் வழி நடத்­தப்­பட்ட திறப்பு விழா­வுக்­குப் பிறகு பேசிய ஜென்ஸ்­கி­ரிப்ட் ஏஷியா பசி­பிக்­கின் தலை­வ­ரான திரு ஜான்­சன் வாங், புதிய நிலை­யத்­தில் கிட்­டத்­தட்ட 50 ஊழி­யர்­கள் பணி­யில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார். மேலும் 100 பேர் வேலைக்கு எடுக்­கப்­ப­டு­வர் என்று எதிர்­பார்க்­கப்

­ப­டு­கிறது. வேலைக்கு எடுக்­கப்­

ப­டு­வோ­ரில் பெரும்­பா­லா­னோர் சிங்­கப்­பூ­ரர்­க­ளாக இருப்­பர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

ஆய்வுக்­கூ­டத் தொழில்­நுட்­பர்­கள், விஞ்­ஞா­னி­கள், தள­வாட ஊழி­யர்­கள் முத­லி­யோர் வேலைக்கு எடுக்­கப்­ப­டு­வர்.

சீனா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­க­ளுக்­குப் பிறகு சிங்­கப்­பூ­ரில்­தான் இத்­த­கைய நிலை­யம் திறக்­கப்­பட்­டுள்­ள­தாக ஜென்ஸ்­கி­ரிப்ட் நிறு­வ­னத்­தின் உயிர் அறி­வி­யல் பிரி­வுத் தலை­வர் டாக்­டர் ரே சென் கூறி­னார்.