பழம்பெரும் செய்தியாளர் ஏ.பி. ராமன் காலமானார்

பழம்பெரும் செய்தியாளர் ஏ.பி. ராமன் காலமானார்

3 mins read
eaa0597b-2a7b-40a7-ad4d-f4a368d640f3
பழம்­பெ­ரும் செய்­தி­யா­ள­ரும் இலக்­கிய ஆர்­வ­ல­ரு­மான ஏ.பி. ராமன்.படம்: ஏ.பி. ராமன் ஃபேஸ்புக் -

கி. ஜனார்த்­த­னன்

பழம்­பெ­ரும் செய்­தி­யா­ள­ரும் இலக்­கிய ஆர்­வ­ல­ரு­மான 'ஏ பி ராமன்' என சுருக்கமாக அழைக்­கப்­பட்ட அய்­யா­வய்­யர் பட்­டா­பி­ரா­மன் தமது 89 வய­தில் கால­மா­னார்.

அல்­சைமர்ஸ் நோய்க்­கான சிகிச்­சையை டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் பெற்று கடந்த மாதம் 28ஆம் தேதி வீடு திரும்­பிய திரு ராமன், புதன்­கி­ழமை இரவு 9 மணிக்கு பீஷான் வட்­டா­ரத்­தி­லுள்ள தமது வீட்­டில் உயிர் நீத்­த­தாக அவ­ரது மகன் ஏ பி ஆர் ஸ்ரீதர், 57, தமிழ் முர­சி­டம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

1932ல் தமி­ழ­கத்­தின் கும்­ப­கோ­ணம் மாவட்­டத்­தில் பிறந்த திரு ராமன், தமது படிப்பை முடித்த பிறகு 1952ல் மலே­சி­யா­வுக்­குக் குடி­

பெ­யர்ந்து அங்­குள்ள காவல்­து­றை­யில் எழுத்­தர் வேலை­யில் சேர்ந்­தார்.

மலே­சி­யா­வில் தமிழ் எழுத்­துப்­ப­ணி­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்ட அவர், அங்­குள்ள பல்­வேறு பத்­தி­ரி­கை­களில் கட்­டு­ரை­க­ளை­யும் கதை­க­ளை­யும் எழு­தி­யுள்­ளார்.

1953ல் அவர் 'புதுயுகம்' என்ற பத்­தி­ரி­கை­யில் துணை ஆசி­ரி­ய­ரா­க­வும் பின்­னர் ஆசி­ரி­ய­ரா­க­வும் பணி­யாற்­றி­னார்.

மலாயா நண்­பன் பத்­தி­ரி­கை­யில் பணி­யாற்­றிய திரு ராமன், தமிழ் நேசன், தமிழ் முரசு ஆகிய நாளி­தழ்­க­ளுக்­கும் எழு­தி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரில் 1958ஆம் ஆண்­டில் ஆரம்­பித்த 'கலை­ம­லர்' என்ற திரைத்­துறை பத்­தி­ரிகை 1972ஆம் ஆண்டு வரை இயங்­கி­யது.

பின்­னர் 1960களில் சிங்­கப்­பூ­ருக்கு வந்த திரு ராமன், அப்­போ­தைய ஆர்­டி­எஸ் ஒலி­ப­ரப்­புச் சேவை­யில் செய்­தித் தொகுப்­பா­ள­ரா­கப் பணி­யாற்­றி­னார்.

சிங்­கப்­பூர் தொலைக்­காட்­சி­யின் தமிழ் செய்­திப் பிரி­வில் 1972 முதல் 1975 வரை பணி­யாற்­றி­னார். தமி­ழக திரை­யு­ல­கத்­தி­ன­ரை­யும்

சிங்­கப்­பூருக்கு வர­வ­ழைத்­துப் பல்­வேறு நிகழ்ச்­சி­களை நடத்­தி­யுள்­ளார். குறிப்­பாக, நடி­கர் எம்ஜிஆர், 1973ல் வெளி­வந்த தமது 'உல­கம் சுற்­றும் வாலி­பன்' திரைப்­ப­டத்­திற்கு சிங்­கப்­பூர் வந்­த­போது அவ­ருக்கு வேண்­டிய ஏற்­பா­டு­க­ளைச் செய்துகொடுத்தார் திரு ராமன்.

ஏற்­று­மதி, இறக்­கு­மதி வர்த்­த­க­ரா­க­வும் இருந்த திரு ராமன், தமது வாழ்­நா­ளின் கடைசி 15 ஆண்­டு­களை தமிழ்­மொ­ழிக்­காக முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக்­கொண்­டார் என்று திரு ஸ்ரீதர் தெரி­வித்­தார்.

திரு ராமன் புனைந்த 700க்கு மேற்­பட்ட நாட­கங்­களில் பல, சிங்­கப்­பூர் மற்­றும் தமி­ழக வானொலி, தொலைக்­காட்சி நிலை­யங்­களில் படைக்­கப்­பட்­டுள்­ளன.

அவ­ரது மறைவு சிங்­கப்­பூ­ரின் தமிழ் எழுத்­துச் சமூ­கத்­திற்­கும் இலக்­கிய உல­கத்­திற்­கும் தமிழ்ச் சமு­தா­யத்­திற்­கும் பேரி­ழப்­பா­கும் என்று சிங்­கப்­பூர் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் தலை­வர் திரு நா. ஆண்­டி­யப்­பன், 75, தெரி­வித்­தார்.

"மிகச் சிறந்த எழுத்­தா­ள­ரும் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான திரு ராமன், சிங்­கப்­பூ­ரில் தமிழ்­மொழி வளர்ச்­சிக்­காக அரும்­பா­டு­பட்­ட­வர்.

"அன்­பா­க­வும் இயல்­பா­க­வும் பழ­கும் திரு ராமன், பிறர் பேசும்­போது அதற்கு மரி­யாதை தந்து அவர்­க­ளது கருத்தை நன்கு உள்­வாங்­கிக்­கொள்­வார்." என்று திரு ஆண்­டி­யப்­பன் கூறி­னார்.

1960களில் திரு ராமன் ரேஸ் கோர்ஸ் சாலை­யில் தொடங்கிய காவேரி உணவகம் உள்­நாட்டு மற்­றும் வெளி­நாட்டு இலக்­கி­ய­வா­தி­கள் கூடும் இட­மா­கத் திகழ்ந்­தது. "வெளி­நாட்­டி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வரும் இலக்­கி­ய­வா­தி­கள் அங்கு சென்று திரு ராம­னைச் சந்­திக்­கா­மல் செல்­ல­மாட்­டார்­கள்," என்­றும் திரு ஆண்­டி­யப்­பன் குறிப்­பிட்­டார்.

1955ஆம் ஆண்­டி­லி­ருந்து திரு ராமன் தமக்கு நல்ல நண்­பர் என்று கூறிய கலா­சார விருது பெற்ற நாடக இயக்­கு­நர் திரு எஸ்.

வர­தன், 88, தமது கலைப்­ப­ணிக்­குத் திரு ராமன் பெரு­ம­ளவு ஊக்­கம் அளித்­தி­ருந்­த­தா­கவும் தெரி­வித்­தார்.

"எழுத்து வன்­மை­மிக்க திரு ராமன் எனது நாட­கங்­க­ளைப் பற்­றிய விமர்­ச­னக் கட்­டு­ரை­களை எழுதி வந்­தார். நாங்­கள் இரு­வ­ரும் அர­சி­யல், நாட்டு நடப்பு எனப் பல்­வேறு விஷ­யங்­க­ளைப் பற்றி பேசு­வோம். தமிழ் மீதான ஈடு­பாட்டை இளை­யர்­க­ளி­டையே வளர்க்க சமூக ஊட­கங்­களில் பதி­வு­களை எழு­தி­னார்," என்று திரு வர­தன் குறிப்­பிட்­டார்.

பாரதி மற்­றும் பார­தி­தா­சன் விருது, தமி­ழ­வேள் விருது, கலை

மகள் கி.வா.ஜ விருது, க.ப அற­வா­ணன் விருது, ஃபேஸ்புக் ஜாம்­ப­வான் உள்­ளிட்ட விரு­து­க­ளை­யும் பரி­சு­க­ளை­யும் குவித்­துள்ள திரு ராமன், சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கத்­தின் வாழ்­நாள் உறுப்­பி­ன­ரா­க­வும் இருந்­தார்.

84 வயது மனைவி காமாட்­சி­யு­டன் ஐந்து பிள்­ளை­கள் 11 பேரப்­பிள்­ளை­கள் இரண்டு கொள்­ளுப் பேரப்­பிள்­ளை­கள் ஆகி­யோரை விட்­டுப் பிரிந்­துள்­ளார் திரு ராமன்.

திரு ராம­னின் இறு­திச் சடங்கு நேற்று பிற்­ப­கல் நடை­பெற்­றது.