மூடப்பட்ட சிங்கப்பூர் இந்தியர் சங்கம் மீண்டும் திறப்பு

மூடப்பட்ட சிங்கப்பூர் இந்தியர் சங்கம் மீண்டும் திறப்பு

2 mins read
7ab138b5-80e7-482f-9c08-d24646920b84
-

சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கம் நேற்று மீண்­டும் செயல்­படத் தொடங்கியது.

நிர்­வா­கக் குழு உறுப்­பி­னர்

­க­ளுக்கு இடை­யி­லான பிரச்­சி­னை­யைத் தொடர்ந்து, சங்க வளா­கம் கடந்த திங்­கட்­கி­ழமை (பிப்­ர­வரி 7) அன்று மூடப்­பட்­டது.

சங்­கத்­தின் வளா­கம் வியா­ழக்­கி­ழமை அன்று மீண்­டும் திறக்­கப்­படும் என்று கூறிய சுற்­ற­றிக்­கையை, சிங்­கப்­பூர் இந்­தி­யர்

சங்­கத் தலை­வர் விஷ்ணு பிள்ளை புதன்­கி­ழமை இரவு அனுப்­பி­னார்.

அதில் பொறுமை காத்­த­தற்­காக உறுப்­பி­னர்­க­ளுக்கு நன்­றி­கூ­றிய அவர், சங்­கத்­தின் செயல்­பா­டு­க­ளுக்கு தற்­போ­தைய நிர்­வா­கக் குழு­தான் பொறுப்பு வகிப்­ப­தா­க­வும் பதில் சொல்­லும் இடத்­தில் இருப்­ப­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

கடந்த சனிக்­கி­ழமை அன்று சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத்­தின் ஆண்­டுப் பொதுக்­கூட்­டம் நடந்­தது.

அதில் தற்­போ­தைய நிர்­வா­கக் குழு­வுக்கு பதி­லாக, சங்­கத்­தின் துணைத்­த­லை­வர் தமிழ் மாறன் தலை­மை­யில் இடைக்­கால நிர்­வா­கக் குழுவை அமைக்க உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளித்­த­னர்.

அதை அடுத்து, சங்க வளா­கத்தை மூட தற்­போ­தைய தலை­வர் விஷ்ணு பிள்ளை முடிவு செய்­தார்.

இத­னால் பாலஸ்­டி­யர் சாலையில் இருக்­கும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் சங்­கத்­தின் 800 உறுப்­பி­னர்­கள் மூன்று நாள்­க­ளாக வளா­கத்­தில் நுழைய முடி­ய­வில்லை.

விளை­யாட்­டுப் பயிற்­சிக்­காக வளா­கத்­தைப் பயன்­ப­டுத்த வந்த சிலர் உள்ளே அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்­றும் கூறப்­பட்­டது.

சங்­கத்­தின் நிர்­வா­கக் குழுத் தேர்­தல் ஏன் நடத்­தப்­ப­டா­மல் இருந்­தது பற்றி ஆண்டு பொதுக் கூட்­டத்­தில் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இதைத் தொடர்ந்து, முன் அறி­விப்பு இன்றி தேர்­தல் நடத்­தப்­பட்டு புதிய இடைக்­கால நிர்­வா­கக் குழு தேர்வு செய்­யப்­பட்­டது.

அந்த இடைக்­கா­லக் குழு­வின் தேர்வு செல்­லுமா என்­பது இன்­ன­மும் தெளி­வா­க­வில்லை.

திரு விஷ்ணு தேர்தல் செல்லாது என்று கூறியுள்ளார்.