நீல அல்லது ஆரஞ்சு நிற சாஸ் அட்டை வைத்திருக்கும் பெண்
களுக்கு இலவசமாக எச்பிவி தடுப்பூசி போடப்படும். குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த 18 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களுக்கு
இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.
கர்ப்பப்பைவாய் புற்றுநோயைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்தச் சலுகை இவ்வாண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும். இதற்கான செலவை தெமாசெக் அறநிறு
வனம் முழுமையாக ஏற்கிறது.
சாஸ் அட்டைகளை ஏற்கும் தனியார் மருந்தகங்களுக்குச் சென்று எச்பிவி தடுப்பூசியைத் தகுதி பெறும் பெண்கள்
போட்டுக்கொள்ளலாம்.
பொதுவாக, அரஞ்சு அல்லது நீல நிற சாஸ் அட்டை வைத்திருப்போர் பலதுறை மருந்தகங்களில் ஒருமுறை எச்பிவி தடுப்பூசி போட்டுக்கொண்டால் $23 வரை செலுத்த வேண்டும். முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவராக இருக்க வேண்டு மென்றால் மொத்தம் மூன்று தடுப்பூசி களைப் போட்டுக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்கள் பட்டியலில் கர்ப்பப்பைவாய் புற்று நோய் பத்தாவது இடத்தில் உள்ளது. பெண்கள் பலருக்கு
மரணத்தை ஏற்படுத்தும் நோயாக அது உள்ளது.

