அவசர உதவி; 213,615 அழைப்புகள்

அவசர உதவி; 213,615 அழைப்புகள்

3 mins read
d9fe6823-08e6-4a4d-b78c-7f0d70c925ef
கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த ஆண்டு அவசர மருத்துவ சேவையை அதிகமானோர் அழைத்தனர் என்று சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை தெரிவித்தது. கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொவிட்-19 தொற்று கார­ண­மாக கடந்த ஆண்டு அதி­க­மா­ன­வர்­க­ளுக்கு அவ­சர மருத்­துவ உதவி தேவைப்­பட்­டுள்­ளது.

ஏரா­ள­மா­ன­வர்­கள் அவ­சர மருத்­துவ உதவி கேட்டு அழைப்பு விடுத்­துள்­ள­னர்.

ஏறக்­கு­றைய 213,615 அழைப்­பு­கள் வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை நேற்று வெளி­யிட்ட ஆண்டு அறிக்­கை­யில் தெரி­வித்­தது. 2020ஆம் ஆண்­டில் வந்த அழைப்­பு­க­ளை­விட கடந்த ஆண்டு 11.9 விழுக்­காடு கூடி­யது.

குறிப்­பாக செப்­டம்­ப­ருக்­கும் நவம்­ப­ருக்­கும் இடையே மொத்­தம் 63,000 அழைப்­பு­களை குடி­மை தற்­காப்­புப் படை­யின் துணை மருத்­து­வர்­கள் கையாண்­டுள்­ள­னர். இது, முந்­திய ஆண்டு இதே கால­கட்­டத்­து­டன் ஒப்­பிட்­டால் 36.5 விழுக்­காடு அதி­கம்.

'தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளேடு விளக்­கம் கேட்­ட­போது 63,000 அழைப்­பு­களில் சுமார் 4.6 விழுக்­காடு அவ­சர அழைப்­பு­கள் என்று குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. ஒட்­டு­மொத்­த­மாக கடந்த ஆண்டு அவ­ச­ர­மற்ற அழைப்­பு­கள் சற்று கூடி­யுள்­ளன.

2020ஆம் ஆண்­டில் 8,835 அவ­ச­ர­மற்ற அழைப்­பு­கள் வந்தன. ஆனால் கடந்த ஆண்டு சற்­றுக்­கூடி 9,050 அழைப்­பு­கள் வந்­துள்­ளன.

இதற்கு கொவிட்-19 சம்­ப­வங்­கள் கார­ண­மாக இருக்­க­லாம் என நம்­பப்­ப­டு­கிறது. பல சம்­ப­வங்­களில் தீவிர காயச்­சலோ அல்­லது மருத்து ­வ­ம­னைக்குக கொண்டு செல்­லக்­கூ­டிய அவ­சி­யமோ இல்லை என குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

இருப்­பி­னும் கடந்த சில ஆண்டு­ க­ளாக அவ­சர­மற்ற அல்­லது பொய்­யான அழைப்­பு­கள் குறைந்­துள்­ளன. அவ­சர மருத்­துவ சேவைக்கு மட்­டும் 996 எண்ணை அழைக்­க­வும் என்று 2018ல் மேற்­கொள்­ளப்­பட்ட பிர­சா­ரம் ஓர­ளவு பல­ன­ளித்­துள்­ளதை இது காட்­டு­கிறது.

"உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் இருப்­ப­வர்­க­ளை­யும் அவ­சர மருத்­துவ உதவி தேவைப் படு­வோ­ரை­யும் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­வ­தற்­காக மட்­டும் அவ­சர மருத்­துவ சேவை இருப்­பதை உறுதி செய்ய உயி­ருக்கு ஆபத்­தான நிலை­யில் இல்­லா­த­வர்­கள் 995ஐ அழைப்­பதை தவிர்க்க வேண்­டும்," என்று குடி­மைத் தற்­காப்­புப் படை வலி­யு­றுத்­தி­யது.

உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட அல்­லது சந்­தே­க­மான கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு தீவிர சுவா­சத் தொற்று அறி­கு­றி­கள் அல்­லது மோச­மான உடல்­நி­லை­யில் இருந்­தால் அவர்­கள் மருத்­துவ மனைக்­குக் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­ற­னர் என்று அந்­தப் படை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் மேலும் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்டு அவ­சர மருத்­துவ சேவைக்கு வந்த அழைப்­பு­களில் வேலை­யிட விபத்­து­கள், கீழே விழு­தல், தாக்­கு­தல் போன்ற சம்­ப­வங்­க­ளின் தொடர்­பில் 31,656 அழைப்­பு­கள் வந்­தன.

தீச் சம்­ப­வங்­கள் பற்றி தீ அணைப்­புத் துறைக்கு 1,866 அழைப்­பு­கள் வந்­துள்­ளன. 2020ல் இந்த எண்­ணிக்கை 1,877ஆக இருந்­தது. கடந்த ஆண்டு நிகழ்ந்த தீச் சம்­ப­வங்­களில் 194 பேர் காயம் அடைந்­த­னர். கடந்த ஆண்டு 194 பேருக்கு தீக்காயம் ஏற்­பட்­டது. இது, 2020ஆம் ஆண்­டின் 184ஐவிட அதி­கம். கடந்த ஆண்டு தீச்சம்­ப­வங்­களில் மூவர் உயி­ரி­ழந்­த­னர். இதற்கு முந்­திய ஆண்­டில் ஒரு­வர் மட்­டுமே தீ விபத்­தில் மாண்­டார்.

பெரும்­பா­லான தீச் சம்­ப­வங்­க­ளுக்கு மின்­க­சிவு அல்­லது மின் சாத­னங்­கள் கார­ண­மாக இருந்­துள்­ளன. மொத்த சம்­வங்­களில் அவற்­றின் எண்­ணிக்கை 588. இது, முந்­திய ஆண்­டு­டன் ஓப்­பிட்­டால் 31.9 விழுக்­காடு உயர்­வா­கும். கடந்த ஆண்டு குறை­வான வீட்­டுத் தீச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன. ஆனால் வர்த்­தக இடங்­களில் நிக­ழும் தீச்சம்­ப­வங்­கள் முந்­திய ஆண்­டை­விட கடந்த ஆண்டு 7.5 விழுக்­காடு கூடி­யது. கடந்த ஆண்டு வீட்­டில் நிகழ்ந்த 1,010 தீச் சம்­ப­வங்­களில் கவ­னிக்­கப்­ப­டாத சமை­யல், மின்­சா­ரம், அறை­க­லன் தீப்­பற்­று­வது ஆகி­ய­வற்­றால் ஏற்­பட்­டுள்­ளன. நட­மா­டும் சாத­னங்­கள் தொடர்­பான தீ விபத்­து­கள் கடந்த ஆண்டு ஒட்­டு­மொத்­த­மாக 19.1 விழுக்­காடு குறைந்­தது.