500 மோசடிச் சம்பவங்கள்: 157 பேர் மீது விசாரணை

500 மோசடிச் சம்பவங்கள்: 157 பேர் மீது விசாரணை

2 mins read
c19b646b-641e-4c2c-ae5d-1a10b643eccd
மோசடிக்கு ஆளாகாதீர் என்று கூறும் இதுபோன்ற அறிவிப்புகள் தீவு முழுவதும் வைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மோச­டி­களில் ஈடு­பட்­ட­தாக 157 பேர் மீது காவல் அதி­கா­ரி­கள் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர்.

சந்­தேக நபர்­களில் 97 பேர் ஆண்­கள், எஞ்­சி­யோர் பெண்­கள் என்று கூறப்­ப­டு­கிறது. அவர்­களில் ஆக இளை­ய­வ­ரின் வயது 16 என்­றும் மூத்­த­வ­ரின் வயது 71 என்­றும் நம்­பப்­ப­டு­கிறது.

கிட்­டத்­தட்ட 495க்கும் மேற்­பட்ட மோச­டிச் சம்­ப­வங்­களில் இந்­தச் சந்­தேக நபர்­கள் ஈடுப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மோச­டி­க­ளுக்கு ஆளா­னோர் இழந்த தொகை, $2 மில்­லி­ய­னுக்­கும் மேல் என நம்­பப்­ப­டு­கிறது.

சம்­ப­வங்­களில் இணை­யம் வழி­யாக காதல் வலை­யில் சிக்க வைத்­தல், இணைய வர்த்­த­கம், தொழில்­நுட்ப ஆத­ரவு, சீனா அல்­லது அர­சாங்க அதி­காரி போன்று பாசாங்கு செய்­தல், முத­லீடு, வேலை, கடன், வங்கி தொடர்­பான மோச­டி­கள் அடங்­கும்.

கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி இம்­மா­தம் 10ஆம் தேதி நிறை­வ­டைந்த காவல் அதி­கா­ரி­களின் அம­லாக்­கச் சோத­னை­களில் இந்­தச் சந்­தேக நபர்­கள் சிக்­கி­ய­தாக நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் காவல் துறை­யி­னர் குறிப்­பிட்­ட­னர்.

ஏமாற்­று­தல், பண­மோ­சடி, உரி­ம­மின்றி கட்­ட­ணச் சேவை­கள் வழங்கு­தல் போன்­ற­வற்­றின் தொடர்­பில் சந்­தேக நபர்­கள் மீது விசா­ரணை நடந்து வரு­கிறது.

தங்­க­ளின் வங்­கிக் கணக்கை அல்­லது கைபேசி தொடர்பு எண்­ணை­ப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள யாரே­னும் கேட்­டுக்­கொண்­டால் அதை மறுத்­து­வி­டு­மாறு காவல் துறை பொது­மக்­க­ளுக்கு அறி­வுறுத்தி­யுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் 2016ஆம் ஆண்டு முதல் மோச­டிக்கு ஆளா­னோர் இழந்த மொத்த தொகை $1 பில்­லி­யன் இருக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

காவல்­துறை அதி­கா­ரி­கள் கடந்த ஆண்­டில் மட்­டும் 7,000க்கும் மேற்­பட்ட மோச­டிக்­கா­ரர்­கள் மீது விசா­ரணை மேற்­கொண்­ட­னர்.

மோச­டிக்­கா­ரர்­கள் பயன்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக தங்­க­ளின் வங்­கிக் கணக்­கு­க­ளைச் சிலர் வாட­கைக்­கும் விட்­டி­ருப்­ப­தாக நம்­பப்­ப­டு­கிறது.