சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட தெமாசெக் அரிசி எனும் சிறப்பு ரக அரசி முதன்முறையாக சமூகத் தோட்டத்தில் பயிரிடப்பட்டு விளைச்சல் செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் எதிர்நோக்கும் உணவு விநியோக சவால்களைச் சந்திக்க இந்த முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தெம்பனீசில் அமைந்துள்ள புளோக் 146ல் அமைக்கப்பட்ட சமூகத் தோட்டத்தில் நெல் விளைச்சல் நடைபெற்றது.
தெமாசெக் உயிர் அறிவியல் நிலையம் சோதனைச் சாலையில் தெமாசெக் அரிசியின் விதைநெல் உருவாக்கப்பட்டு பிறகு சமூகத் தோட்டத்தில் சென்ற அக்டோபர் மாதம் நெல் பயிரிடப்பட்டது.
விளைச்சல் செய்யப்பட்ட நெல் ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும்.
பொதுவாக ஒரு கிலோ நெல்லை வயல்களில் பயிரிட்டு வளர்க்க சுமார் 2,500 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
ஒப்புநோக்க, சமூகத் தோட்டங்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் வெறும் 750 லிட்டர் தண்ணீரை மட்டும் பயன்படுத்துகிறது.

