சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் கொவிட்-19 காரணமாக கடந்த இரண்டு ஆண்டு காலமாக வேலைக்கு ஆள் எடுக்கவில்லை. இப்போது அது விமானங் களில் பணியாற்றும் ஊழியர்களை வேலையில் சேர்க்கிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பயணம் மேற்கொள்ள ஏதுவாக மேலும் பல நாடுகளுடன் பயண ஏற்பாடுகள் நடப்புக்கு வருகின்றன. இந்த நிலையில் அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தேவை அதிகரிக்கிறது. அதனால் ஊழியர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இதற்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானச் சிப்பந்திகளை வேலையில் சேர்க்கிறது.
இந்த நிறுவனம் நேற்று இது பற்றி தெரிவித்தது. எஸ்ஐஏ 2020ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்கும் ெசன்ற ஆண்டு மார்ச் இறுதிக்கும் இடையில் மொத்தம் 2,829 ஊழியர்களை இழந்துவிட்டது. அவர்களில் 2,379 பேர் விமானச் சிப்பந்திகள்.
விமானப் பயணிகளின் எண்ணிக்கையையும் பயணிகளின் சேவைகளையும் தேவைக்கேற்ப அதிகப்படுத்தி வரும் எஸ்ஐஏ நிறுவனம், இப்போது தன்னுடைய இணையத்தளம் வழியாக விண்ணப்பங்களை வரவேற்று ஏற்றுக்கொள்கிறது. இருந்தாலும் எத்தனை ஊழியர்கள் வேலையில் புதிதாக சேர்க்கப்படுவார்கள் என்பது பற்றி எஸ்ஐஏ தெரிவிக்கவில்லை.
நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களை யும் கடந்த இரண்டாண்டுகளில் வேலையில் இருந்து விலகிவிட்ட விமானச் சிப்பந்திகளுக்குப் பதிலாக புதிய ஊழியர்களைச் சேர்க்க ஏற்பட்டு உள்ள தேவையையும் கருத்தில்கொண்டு இந்த ஆகப் புதிய ஊழியர் சேர்ப்பு முயற்சி இடம்பெறுவதாகஎஸ்ஐஏ தெரிவித்தது.
இந்த நிறுவனம், சென்ற ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி, 6,887 விமான ஊழியர்களை வேலையில் அமர்த்தி இருந்தது. இந்த எண்ணிக்கை முன்பு 9,266ஆக இருந்தது. விமானச் சிப்பந்திகளில் ஏறக்குறைய கால்வாசிப் பேர் வேலையைவிட்டு சென்றுவிட்டார்கள்.
இப்போது எத்தனை பேர் வேலை பார்க்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களைஎஸ்ஐஏ தெரிவிக்கவில்லை.
கொவிட்-19 காரணமாக எல்லைகள் மூடப்பட்டன. விமானங்கள் சேவைகளை நிறுத்திவிட்டன. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட எஸ்ஐஏ நிறுவனம், 2020 செப்டம்பரில் பெரிய அளவில் ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
எஸ்ஐஏ, அதன் துணை நிறுவனமான சில்க்ஏர், மலிவுக் கட்டண நிறுவனமான ஸ்கூட் ஆகியவற்றில் வேலை பார்த்த ஊழியர்களில் ஏறக்குறைய 4,300 பேரை ஆட்குறைப்புச் செய்ய எஸ்ஐஏ குழுமம் 2020 செப்டம்பரில் முடிவு செய்தது.