வனவிலங்கு, பாடும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று சிங்கப்பூரில் உள்ள சில பழமை விரும்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காடுகளில் பறவைகளின் இனிமையான குரல், சத்தம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதை உறுதி செய்ய பறவை வளர்ப்பாளர்களும் செல்லப் பிராணிகளை விற்கும் கடைக்காரர்களும் நியாயமான வர்த்தக நடைமுறைகளில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
காடுகளில் வாழும் பறவை களுக்குப் பதிலாக கூண்டில் வளர்க்கப்படும் பறவைகளைத் தேர்ந்தெடுக்கலாம். பறவைகளின் தகவல்களுடன் அவற்றுக்கு கால் பட்டைகளை அணிவிக்க வேண்டும். கடைக்காரர்களும் பறவைகள் எங்கிருந்து பிடிக்கப்பட்டு கொண்டு வரப்படுகின்றன என்பதற்கான பதிவுகளை வைத்திருக்க வேண்டும் என்று பழமைவாதிகள் யோசனை கூறியுள்ளனர்.
2018 முதல் 2019 வரை 114 பாடும் பறவைகளை வளர்க்கும் உரிமையாளர்களின் பொழுது போக்கு, விருப்பங்களைப் புரிந்து கொள்ளவும், பறவைப் பாட்டுப் போட்டியின் முக்கியத்துவத்தைப் பற்றி அறியவும் சில பரிந்துரை களுடன் அண்மையில் ஆய்வுக் கட்டுரை ஒன்று வெளியானது.
'பர்ட்ஸ்லைஃப் இண்டர்நேஷனல்' அமைப்பின் பழமைவாதக் குழுவின் பறவை வர்த்தக ஒருங்கிணைப்பாளரான டாக்டர் அனுஜ் ஜெயின் மேற்பார்வையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சிங்கப்பூர் உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கூண்டில் அடைக்கப்பட்ட பாடும் பறவைகளை பாட்டுப் போட்டியில் பங்கேற்கச் செய்வது பிரபலமாக இருந்து வருகிறது.
1950களில் பறவைகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் பழக்கம் இங்கு தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

