பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைவரான லோ தியா கியாங், தாம் அரசியலுக்கு மீண்டும் திரும்புவது குடியிருப்பாளர்களின் கையில் உள்ளது என்று கூறியுள்ளார்.
பாட்டாளிக் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிலர் கூறு வதால் திரு லோவின் அரசியல் ஓய்வு முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு, பாட்டாளிக் கட்சித் தலைவர் களிடமும் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானிடமும் நடத்திய விசாரணை அறிக்கை கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ரயீசா கான் பொய்யுரைத்ததன் தொடர்பில் இந்த விசாரணை நடைெபற்றது.
2018ல் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் ெசயலாளர் பொறுப்பில் இருந்து லோ விலகினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அல்ஜுனிட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் விலகினார்.
இந்நிலையில் ஷின்மின் நாளி தழுக்குப் பேட்டியளித்துள்ள திரு லோ, இந்தச் சிரமமான காலக்கட்டத்தில் பாட்டாளிக் கட்சியை நிலைநிறுத்த தம்மை அழைக்கும் குடியிருப்பாளர்களைப் பாராட்டினார்.
"என்னைக் கேட்பது மக்களின் உரிமை, ஆனால் கட்சியில் திறன்மிக்கவர்கள் பலர் உள்ளனர். இதனால் கட்சியைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை," என்று திரு லோ தியா கியாங் மேலும் தெரிவித்துள்ளார்.

