தந்தையை இழந்ததால் மனச்சோர்வுக்கு ஆளானார் 17 வயது ஃபர்ஸானா.
அவருக்குப் பக்கபலமாக இருந்த அவரின் தோழிகளை தன் உயிருள்ளவரை மறக்க முடியாது என்கிறார் ஃபர்ஸானா.
"நல்ல நண்பர்கள் இறைவன் அளிக்கும் வரம்," என்கிறார் அவர்.
பல சமயங்களில் உடல்நலக் குறைவால் ஒடுங்கி கிடந்த கயல்விழியை, கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டனர் தோழிகள்.
"நமக்காகவே ஒருவர் நேரத்தை ஒதுக்குகிறார் என்றால் அதைவிட இவ்வுலகில் வேறு விலைமதிப்பான பரிசு இல்லை," என்றார் கயல்விழி.
பன்னிரண்டு ஆண்டு காலமாக ஒன்றாக இருக்கும் கயல்விழி கதிரொளி, நூருல் ஃபர்ஸானா, பொன்மணி பிரியதர்ஷனி மூவரும் பெருமிதத்துடன் கூறிக்கொள்வது, 'நாங்கள் சகோதரிகள்'.
கடல்கடந்தும் நேரங்கடந்தும் இவர்களது சகோதரத்துவம் நிலைத்துள்ளது. கயல்விழியும் பொன்மணியும் இங்கிலாந்தில் படித்தபோது, சிங்கப்பூரிலிருந்து ஃபர்ஸானா ஸ்கைப் வாயிலாக அவர்களுடன் இணைவார்.
இரு நாடுகளுக்கிடையே எட்டு மணி நேர வித்தியாசம் இருப்பினும், கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் மூவரும் இணையம்வழி உரையாடினர்.
அன்பையும், நட்பையும் கொண்டாடும் நாளாக மூன்று தோழிகளும் ஆண்டுதோறும் அன்பர் தினத்தைக் கொண்டாடுகின்றனர்.
"எதிர்காலத்தில் எங்கள் மூவரது வாழ்க்கை வெவ்வெறு திசைகளில் செல்லலாம். எப்படி, எங்கே இருந்தாலும் இந்த நாளை ஒன்றாகத்தான் கொண்டாடுவோம்," என்று உறுதியாகக் கூறினர் தோழிகள்.

