பிரம்மாண்ட செயல்களைவிட அன்பு நிறைந்த வார்த்தைகளே முக்கியம்

பிரம்மாண்ட செயல்களைவிட அன்பு நிறைந்த வார்த்தைகளே முக்கியம்

1 mins read
31f79bc2-37f8-48f1-89f9-59b9d47ad8d3
மலையரசி, பவித்திரன். படம்: பவித்திரன் -

கவ­லை­யும் அச்­ச­மும் நில­விய கொவிட்-19 கொள்­ளை­நோய்ச் சூழ­லில், அதிக மன­உ­ளைச்­ச­லுக்­கும் உடல் சோர்­வுக்­கும் ஆளா­கி­ய­வர்­கள் மருத்துவத் துறையினர்.

அலெக்­சாண்ட்ரா மருந்­த­கத்தில் உதவியாளராகப் பணியாற்றும் 28 வயது மலை­ய­ரசி சிவம், அன்­றா­டம் பன்­னி­ரண்டு மணி நேரம்­வரை வேலை செய்ய வேண்­டி­யி­ருந்­தது.

இருப்­பி­னும் தன் வேலையை உறு­தி­யு­ட­னும் உற்­சா­கத்­து­ட­னும் செய்­வ­தற்கு முக்­கி­யக் கார­ண­மாக இருந்­த­வர் தன் காத­லர், பவித்­தி­ரன் என்­கி­றார் அவர்.

"பவித்­தி­ரன் அடிக்­கடி ரோஜாப் பூக்­க­ளு­ட­னும் இனிப்­பு­க­ளு­ட­னும் எனது வேலை­யி­டத்­துக்கு வந்து காத்­தி­ருப்­பார். அந்த இன்ப அதிர்ச்­சி­கள் எனக்கு உற்­சா­க­மூட்­டின. மன உளைச்­ச­லைப் போக்­கின," என்­றார் மலை­ய­ரசி.

அதிக சிரத்­தை­யெ­டுத்து வாழ்க்­கை­யில் திட்­ட­மி­டும் பவித்­தி­ர­னும் திட்­ட­மி­டு­த­லில் அவ்­வளவு ஈடு­பாடு இல்­லாத மலை­ய­ர­சி­யும் குணத்­தில் வெவ்­வே­று­தான்.

ஆனால் அவர்­க­ளின் அன்பு ஒன்றே.

"நாங்­கள் இரு­வ­ரும் எங்­க­ளது குறை­நி­றை­களைப் பற்­றிய புரிந்­து­ணர்வை வளர்த்­துக்­கொண்­டுள்­ளோம். அது எங்­களை மேலும் பிணைத்­துள்­ளது," என்­றார்­கள்.

"தன்­னம்­பிக்கை இல்­லா­மல் இருந்த எனக்கு தைரி­யம் ஊட்­டி­ய­வர் மலை­ய­ரசி. இன்­றைக்­குத் தைரி­ய­மாக நான் பேசு­வ­தற்­கும் மலை­ய­ர­சி­தான் கார­ணம்," என்­றார் வசந்­தம் ஒளி­வ­ழி­யில் தொழில்­நுட்­பத்­து­றை­யில் பணி­பு­ரி­யும் பவித்­தி­ரன் நாதன், 30.

ஏழு ஆண்­டு­க­ளாக ஒன்­றாக உள்ள இந்த இளம் தம்­ப­தி­யர், கடந்த ஆண்டு தங்­களின் திரு­ம­ணத்தை நிச்­ச­யம் செய்­து கொண்டனர்.

பிரம்­மாண்­ட­மான செயல்­களை­விட அன்­பான சொற்­களும் எண்­ணங்­க­ளுமே தங்­க­ளுக்கு அதிக அர்த்­த­முள்­ள­தாக விளங்­கு­வ­தாய் இவ்­வி­ரு­வ­ரும் கூறி­னர்.