தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொழுதுபோக்குக்காக சூதாடுவதை சட்டபூர்வமாக்கத் திட்டம்

2 mins read
aa1a489e-1e12-41e0-90d2-f74ce94d115c
-

பொழு­து­போக்­குக்­காக குடும்­பத்­தா­ரு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் ஒன்­றாக அமர்ந்து சூதா­டு­வது கூடிய விரை­வில் சட்­ட­பூர்­வ­மாக்­கப்­ப­டக்­கூ­டும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது­கு­றித்து நாடா­ளு­மன்­றத்­தில் மசோ­தாக்­கள் தாக்­கல் செய்­யப்­பட்­டன.

பொழு­து­போக்­குக்­காக சூதாடு ­வது தற்­போது சட்­ட­வி­ரோ­த­மல்ல. இருப்­பி­னும், அதுகுறித்து

சட்­டத்­தில் தெளி­வா­கக் குறிப்­

பி­டப்­ப­ட­வில்லை.

சட்­ட­பூர்­வ­மாக்­கப்­பட்­டால் பொழு­து­போக்­குக்­காக சூதா­டு­வது தொடர்­பாக எவை­யெல்­லாம் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். எவை

ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டாது என்­பது குறித்து தெளி­வா­கத் தெரி­விக்­கப்­படும்.

நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் முதல்­மு­றை­யாக சிங்­கப்­பூர் சூதாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணைய மசோ­தா­வும் சூதாட்­டக் கட்­டுப்­பாட்டு மசோ­தா­வும் வாசிக்­கப்

­பட்­டன.

தற்­போது சிங்­கப்­பூ­ரில் சூதாட்­டம் பல்­வேறு அர­சாங்க அமைப்பு ­க­ளின் கண்­கா­ணிப்­பின்­கீழ் உள்­ளது.

தாக்­கல் செய்­யப்­பட்ட மசோதா சட்­ட­மாக்­கப்­பட்­டால் சிங்­கப்­பூ­ரில் சூதாட்­டத் துறை முழு­வ­தும் புதிய சூதாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணை­யத்­தின்­கீழ் கொண்­டு­வ­ரப்­படும்.

எந்­த­வித வயது வரம்புமின்றி குடும்­பத்­தா­ரு­ட­னும் நண்­பர்­க­ளு­ட­னும் ஒன்­றாக அமர்ந்து பொழு­து ­போக்­குக்­காக சூதா­டு­வ­தைச் சட்­ட­பூர்­வ­மாக்­கு­வது புதிய மசோ­தா­வின்­கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள முக்­கிய மாற்­ற­மா­கும்.

ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளு­டன் அல்­லது நண்­பர்­

க­ளு­டன் ஒன்­றாக அமர்ந்து சூதா­ட­லாம் என்­ற­போ­தி­லும் அது வர்த்­தக முறை­யில் நடத்­தப்­ப­டக்­கூ­டாது என்­றும் தனி­ந­பர் ஒரு­வ­ரின் வீட்­டில் மட்­டுமே சூதாட முடி­யும் என்­றும் நிபந்­தனை விதிக்­கப்பட்­டுள்­ளது.

இணை­யம் மூலம் சூதாட்­டத்­துக்கு விதிக்­கப்­பட்­டுள்ள தடை தொடர்­கிறது. சூதாட்­டத்­துக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் சாத­னங்­களை வைத்­தி­ருக்க உரி­மங்­கள் தேவைப்­படும் என்ற நிலை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட உள்­ளது.

சூதாட்­டத்­திற்கு அடி­மை­யா­கும் நிலை­யை­யும் சூதாட்­டம் கார­ண­மாக சமூக அள­வி­லான பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­வ­தை­யும் தவிர்க்க தேவை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் உறுதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூர் பூல்­ஸைத் தவிர்த்து சூதாட்­டத்­தில் ஈடு­பட குறைந்­தது 21 வய­தாக இருக்க வேண்­டும் என்று விதி­முறை விதிக்­கப்­படும். சிங்­கப்­பூர் பூல்ஸ் வழங்­கும் சூதாட்­டச் சேவை­களில் ஈடு­பட குறைந்­தது 18 வய­தாக இருக்க வேண்­டும்.