செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0289d300-90fb-4f3a-bb97-b8c2bdbc3eba
-

மேலும் 9,420 பேருக்கு

கொவிட்-19 கிருமித்தொற்று

சிங்கப்பூரில் நேற்று முன்தின நிலவரப்படி மேலும் 9,420 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. இவர்களில் 9,195 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

கிருமித்தொற்று காரணமாக நேற்று முன்தினம் மேலும் நான்கு பேர் மாண்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கிருமித்தொற்றால் நோய்வாய்ப்பட்ட 1,272 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து ஒன்பது நாட்களாக 1,000ஐ தாண்டியுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 24 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 162 பேருக்கு கூடுதல் உயிர்வாயு தேவைப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 225 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மரணம் விளைவிக்கும்

விபத்துகள் அதிகரிப்பு

சிங்­கப்­பூர் சாலை­களில் மர­ணம், காயம் விளை­விக்­கும்

விபத்­து­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு அதி­க­ரித்­த­தாக போக்­கு­வ­ரத்­துக் காவல்­து­றை­யி­னர் நேற்று தெரி­வித்­த­னர். கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்­து­களில் 107 பேர் மாண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

ஒப்­பு­நோக்க, 2020ஆம் ஆண்டு சாலை விபத்­து­களில் 83 பேர் உயி­ரி­ழந்­த­னர். இருப்­பி­னும் கொவிட்-19 நெருக்­க­டி­

நி­லைக்கு முன்பு 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்­து­களில் மாண்­டோர் எண்­ணிக்கை 118ஆகப் பதி­வானது என்­றும் அத­னு­டன் ஒப்­பி­டும்­போது கடந்த ஆண்­டின் மரண எண்­ணிக்கை குறைவு என்­றும் போக்­கு­வ­ரத்­து காவல்­து­றை­யி­னர் வலி­யு­றுத்­தி­னர்.

2020ஆம் ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில், சிங்­கப்­பூ­ரில் மர­ணம் விளை­விக்­கும் சாலை விபத்­து­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு 25 விழுக்­காடு அதி­க­ரித்­தது. கடந்த ஆண்டு சிங்­கப்­பூ­ரில் நிகழ்ந்த சாலை விப­தத்­து­களில் காய­ம­டைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் ஏற்­றம் கண்­டது. 2020ஆம் ஆண்­டில் நிகழ்ந்த சாலை விபத்­து­களில் 6,669 பேர் காய­முற்­ற­னர். கடந்த ஆண்டு இந்த எண்­ணிக்கை 7,184ஆக அதி­க­ரித்­தது.

சாலை விபத்­து­களில் காய­ம­டைந்த முதி­ய­வர்­க­ளின் எண்­ணிக்கை கடந்த ஆண்டு குறைந்­த­தாக போக்­கு­வ­ரத்­து காவல்­துறை தெரி­வித்­தது.