சிங்கப்பூர் எக்ஸ்போவில் சிறார், முதியவர்கள் ஆகியோருக்காக புதிய கொவிட்-19 சிகிச்சை நிலையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் அலையை
முன்னிட்டு அதிகம் பாதிப்படையக்கூடிய நோயாளிகளுக்குச் சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குவதில் மருத்துவமனை
களுக்கு உதவி செய்ய இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய சிகிச்சை நிலையம் சிங்கப்பூர் எக்ஸ்போவின் ஒன்பதாவது மண்டபத்தில் அமைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.
நிலையத்தில் சிறுவர்களுக்கு ஏறத்தாழ 600 படுக்கைகளும் மூத்தோருக்கு 224 படுக்கைகளும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
டெல்டா கிருமி வகையைவிட ஓமிக்ரான் கிருமி வகை சிறுவர்களைப் பாதிக்கும் சாத்தியம் அதிகம் உள்ளது. எனவே, கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்குத் தேவையான சிகிச்சையைப் புதிய நிலையம் வழங்கும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.

