சிங்கப்பூரில் உள்ள சில நிறுவனங்களின் நிதிநிலைப் பட்டியலின் தரத்தில் குறைபாடு இருப்பதாக அண்மையில் வெளியான அறிக்கை ஒன்றை மேற்கோள் காட்டியுள்ள நிபுணர்கள், தரத்தை மேம்படுத்துவதற்கான உள்ளக நடைமுறைகளை நிறுவனங்கள் வலுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில், 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் $78.67 பில்லியன் அளவுக்கு 22,051 தணிக்கை சரிக்கட்டல்கல்களைச் செய்ய கணக்காய்வாளர்கள் பரிந்துரைத்து இருந்தனர்.
இங்குள்ள பங்குச்சந்ததையில் பட்டியலிடப்பட்ட 412 நிறுவனங்கள் தொடர்பானவை அவை என்றும் ஆய்வறிக்கை கூறியிருந்தது.
இந்த உத்தேச சரிக்கட்டல்கள் மூன்று ஆண்டுகளுக்கான ஒட்டுமொத்த நிகர வருவாயில் கிட்டத்தட்ட $1.15 பில்லியன் அளவுக்கு நிதி
நிலைப் பட்டியலில் குறைத்துக் காட்டப்படதாக கணக்கியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இந்த ஆணையம்தான் ஆய்வுக்கு ஏற்பாடு செய்தது.
பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் நிதிநிலைப் பட்டியல்களைத் தயார் செய்த பின்னர் அவை கணக்கியல் தரத்துடன் ஒத்துப்போகின்றனவா என்பதை கணக்காய்வாளர்கள் சோதித்து அறிவர்.
ஒருவேளை தவறுகள் இருப்பின் அவற்றைச் சரிசெய்யுமாறு கணக்காய்வாளர் பரிந்துரைக்கலாம்.
வெளியிடப்பட்ட ஆய்வின் கண்டுபிடிப்புகள் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கை பற்றிய கவலைகளை எழுப்பி உள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வர்த்தகப் பிரிவு பேராசிரியர் மாக் யுவென் டீன் தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்ய பரிந்துரைக்கப்பட்டவற்றில் சுமார் 85 விழுக்காடு சரியான தகவல்
களைத் தரக்கோரும் அளவுக்கு அடிப்படை தவறுகள் அல்லது தவறாக வகைப்படுத்தப்பட்ட தவறுகள்.
மேலும் 44 விழுக்காடு நிகர வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தவறுகள் என்று ஆய்வு அறிக்கை கூறியது.

