சான்: கூடுதல் அரசு ஊழியர்கள் பதவி விலகல்

சான்: கூடுதல் அரசு ஊழியர்கள் பதவி விலகல்

1 mins read
1f00566f-a3db-45a5-b8e8-fb5756fa7f19
-

கடந்த பத்­தாண்­டு­கள் இல்­லாத அள­வில் கடந்த ஆண்டு கூடு­தல் அர­சாங்க ஊழி­யர்­கள் பதவி விலகிய­தாக பொதுச் சேவைத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சரானன சான் சுன் சிங் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று தெரி­வித்­தார்.

கடந்த ஆறு மாதங்­க­ளா­கப் பதவி வில­கும் அர­சாங்க ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­

க­ரித்து வரு­வ­தாக அவர் கூறி­னார். தக­வல் தொடர்­புத் தொழில்­நுட்­பம் போன்ற துறை­களில் ஊழி­யர் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவற்­றுக்கு நெருக்­கு­தல் ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் திரு சான் தெரி­வித்­தார்.

கடந்த ஆண்­டில் தக­வல் தொடர்­புத் தொழில்­நுட்­பத் துறை­யின் ஊழி­யர் பதவி வில­கல் விகிதம் 9.9 விழுக்­காட்­டுக்­கும் அதி­கம். அதன் துல்­லி­ய­மான விகி­தத்தை திரு சான் குறிப்­பி­ட­வில்லை. வேலை­யில் ஊழி­யர்­கள் எதிர்­கொள்­ளும் கூடு­தல் அழுத்­தங்­கள், சம்­ப­ளம், நிபு­ணத்­துவ மேம்­பாட்­டுக்­கான வாய்ப்­பு­கள் போன்ற கார­ணங்­க­ளால் பொதுச் சேவைப் பணி­யி­லி­ருந்து ஊழி­யர்­கள் பலர் வில­கி­யி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"குறிப்­பாக, கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்­குக் கடும் அழுத்­தம் ஏற்­பட்­டது. அய­ராது உழைக்­கும் நிலை அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டது.

"கொவிட்-19 நெருக்­க­டி­நிலை கார­ண­மாக சில சம­யங்­களில் அதி­கப் பதற்­றத்­து­டன் இருந்­த­வர்­கள், அதிக எதிர்­பார்ப்­பு­டன் இருந்­த­வர்­கள் போன்­றோ­ரைச் சமா­ளிக்­கும் நிலை அர­சாங்க ஊழி­யர்­க­ளுக்கு ஏற்­பட்­டது. அத்­து­டன் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் முறைக்­குப் பலர் மாறி­யி­ருப்­ப­தால் வேலைக்­கும் சொந்த வாழ்க்­கைக்­கும் இடை­யி­லான இடை­வெளி குறைந்­துள்­ளது," என்று அமைச்­சர் சான் தெரி­வித்­தார்.