புதிய தேசிய சேவையாளர்களுக்குத் துப்பாக்கி வழங்கும் சடங்கு

புதிய தேசிய சேவையாளர்களுக்குத் துப்பாக்கி வழங்கும் சடங்கு

1 mins read
3de7d4a4-c644-4ec5-b6ca-09e8913d04ad
-

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் புதி­தா­கச் சேர்ந்­துள்ள 60 முழுநேர தேசி­ய சேவை­யா­ளர்­க­ளுக்கு முதன்­மு­றை­யாக துப்­பாக்­கி­கள் வழங்­கப்­பட்டுள்­ளன. சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் அடிப்­படை ராணு­வப் பயிற்சி நிலை­யத்­தைச் சேர்ந்த 60 வீரர்­க­ளுக்குத் துப்­பாக்­கி­கள் வழங்­கப்­பட்­டன.

முழு­மைத் தற்­காப்பு தினமான நேற்று மரீனா பே மிதக்­கும் மேடை­யில் இந்­தச் சடங்கு நேற்று நடை­பெற்­றது. பொது­மக்­க­ளாக இருந்­த­வர்­கள் ராணுவ வீரர்­க­ளாக உரு­வெ­டுப்­பதை இச்­ச­டங்கு சித்­தி­ரிக்­கிறது. துப்­பாக்கி வழங்­கும் சடங்­கில் கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூ­ரின் மையப் பகு­தி­யிலி­ருந்து போரின்­போது கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் சாங்­கிக்கு வலுக்­கட்­டா­ய­மா­கக் கால்­ந­டை­யாக அழைத்­துச் செல்­லப்­பட்­ட­தைத் திரு டோங் நினை­வு­கூர்ந்­தார். போர்க்­கா­லம் தொடர்­பில் சிங்­கப்­பூ­ரின் வர­லாற்றை நினை­வுப்­ப­டுத்­து­வ­தில் இச்­ச­டங்கு முக்­கி­ய­மாக அமை­வதா­க­ அவர் குறிப்­பிட்­டார்.

"ராணு­வத் தற்­காப்­பில் நாம் அக்­கறை செலுத்­து­வ­தன் முக்­கியத்­து­வத்தை நாம் இங்கே ஞாப­கப்­ப­டுத்­திக்­கொள்­கி­றோம், இதுவே தேசிய சேவை­யைத் தொடங்­கி­யதற்­கான கார­ணம்," என்று அவர் கூறி­னார். இவ்வாண்டு தேசிய சேவையின் 55ஆம் ஆண்டு நிறைவும்கூட.

போர்க்­கா­லத்­தில் செந்­தோ­சா­வில் அமைந்­துள்ள சிலோசா கோட்டை சிங்­கப்­பூ­ரைப் பாது­காக்­க­வில்லை. அனைத்து வழி­க­ளி­லும் சிங்­கப்­பூ­ரைப் பாது­காக்­கக் கூடு­தல் முயற்­சி­களை எடுக்கவேண்டும் என்­பதை இது நினை­வு­ப­டுத்­து­வா­க­வும் அமைச்சர் டோங் சுட்டினார்.