தடுப்பூசி போட்டோர் சிங்கப்பூர் வருவதற்கான ஏற்பாடு விரிவு

தடுப்பூசி போட்டோர் சிங்கப்பூர் வருவதற்கான ஏற்பாடு விரிவு

1 mins read
8860d566-d288-4943-9016-a30e5a2233bc
-

கத்­தார், சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­களில் இருந்து பிப்ர­வரி 25 முதல் சிங்­கப்­பூ­ருக்கு வரும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் தங்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­திக்கொள்ள வேண்­டிய தேவை இல்லை.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோருக்­கான பய­ணப் பாதை திட்டம் விரி­வாக்­கப்­ப­டு­வதே இதற்கான கார­ணம்.

தாய்­லாந்­தின் அனைத்து நகர்­களில் இருந்­தும் முற்றி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பய­ணி­கள் இனி­மேல் சிங்­கப்­பூர் வர­லாம்.

அவர்­கள் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்ளவேண்­டிய தேவை இல்லை.

சிங்­கப்­பூர், மார்ச் 4ஆம் தேதி முதல் இஸ்­ரேல், பிலிப்­பீன்ஸ் நாடு­க­ளுக்­கும் இந்­தப் பய­ணப் பாதை ஏற்­பாட்டை நடை­மு­றைப்­படுத்­து­கிறது. சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றில் இருந்து நன்கு பாது­காக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

அவர்­க­ளுக்குத் தொற்று ஏற்­படும் பட்­சத்­தில் அவர்­க­ளால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு முறைக்­குச் சுமை இருக்­காது என்­பதை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் சிங்­கப்­பூர் தன்­னு­டைய எல்லைக் கட்டுப்பாட்டு நட­வ­டிக்­கை­க­ளைத் திருத்தி அமைக்­கிறது.

இத­ன்தொடர்பில் அந்த மாற்றங்­கள் இடம்­பெ­று­வதாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று நடந்த மெய்­நி­கர் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தார்.

த­னிமை உத்­த­ர­வில்­லாத பயணத் திட்­டத்­தின்­கீழ் அதிக மக்­கள் சிங்­கப்­பூ­ருக்கு வர அனு­மதிக்­கப்­ப­டு­வார்­கள்.

ஹாங்­காங்கை பொறுத்­த­வரை பிப்­ர­வரி 21 இரவு 11.59 மணி முதல் புதிய தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்­கான பய­ணப்­பாதைத் திட்­டம் தொடங்­கும்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட ஹாங்­காங்கை சேர்ந்த பய­ணி­கள் மட்­டுமே தனிமை உத்­த­ர­வில்­லா­மல் சிங்­கப்­பூர் வர­மு­டி­யும்.