எல்லா விளையாட்டுகளும் 30 பேரை உள்ளடக்கும் அளவிற்கு பிப்ரவரி 25 முதல் அனுமதிக்கப்படும். விளையாட்டுகளில் கலந்துகொள்வோர் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
இதை, அமைச்சுகள் நிலை கொவிட்-19 சிறப்புப் பணிக்குழு நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது. அனுமதிக்கப்படுவோரில் விளையாட்டாளர்கள், பயிற்சி அளிப்பவர்கள், நடுவர்கள் அனைவரும் உள்ளடங்குவர்.
விளையாட்டு தொடங்குவதற்கு முன்பும் முடிந்த பிறகும் இடைவெளி நேரத்தின் போதும் நடப்பில் உள்ள பாதுகாப்பு நடை முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டாளர்கள் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டு இருப்பார்கள் என்பதால் விளையாட்டுக்கு முன்னதாக கூடுதல் பரிசோதனை தேவை இல்லை.
இருந்தாலும் விளையாடும் இடத்திற்குச் செல்வோர் முன்ன தாக தங்களைத் தாங்களே பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

