சாதனை அளவாக தொற்று; ஒரே நாளில் 19,420 பேர் பாதிப்பு

சாதனை அளவாக தொற்று; ஒரே நாளில் 19,420 பேர் பாதிப்பு

1 mins read
a0a03321-f1b4-4e5d-9d57-3dc2a2136022
-

சிங்­கப்­பூ­ரில் செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று சாதனை அள­வாக 19,420 பேருக்­குப் புதி­தாக கொவிட்-19 கிருமித்தொற்று உறு­தி­யா­னது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த 2020ல் கொவிட்-19 முதன்­மு­த­லில் தலை­காட்­டிய பிறகு ஆக அதி­க­மான அன்­றா­டத் தொற்று எண்­ணிக்கை இதுவே என்று தெரி­விக்­கப்­பட்டுள்ளது. தொற்று கார­ண­மாக செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று ஏழு பேர் உயிர் இழந்­த­னர்.

கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட 1,355 பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வந்தனர். புதி­தாக கிருமி தொற்­றி­யோ­ரில் 16,102 பேருக்கு ஏஆர்டி பரி­சோதனை­கள் வழி தொற்று கண்­டறி­யப்­பட்­டது. பிசி­ஆர் பரி­சோ­த­னை­­மூ­லம் 3,077 பேருக்குத் தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த 241 பேருக்­குத் தொற்று இருந்ததும் தெரிந்தது. அவர்­களில் 182 பேருக்கு பிசி­ஆர் பரி­சோ­தனை மூல­மா­க­வும் 59 பேருக்கு ஏஆர்டி பரி­சோ­தனை வழி­யா­க­வும் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர சிகிச்­சைப் பிரி­வில் 23 பேர் உள்­ள­னர். 140 பேருக்கு செயற்கை சுவாச சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது. வாராந்­திர தொற்­றுப் பர­வல் விகி­தம் 1.34 ஆக உள்­ளது.