முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட தாதிமை விடுதிவாசிகளுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருந்தால் அல்லது இலேசான அறிகுறிகள் தெரிந்தால் அவர்கள் தாங்கள் தங்கி இருக்கும் விடுதியிலேயே தொடர்ந்து தங்கி இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.
தனிப்பட்ட பராமரிப்பு நிலையத்திற்கு இன்று முதல் அவர்கள் அனுப்பப்படமாட்டார்கள்.
அத்தகைய விடுதிவாசிகளிடம் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சையோ தனிமை இட பராமரிப்பு சிகிச்சையோ தேவையில்லை என்பது ஆய்வு மூலம் தெரியவந்ததை அடுத்து இந்தப் புதிய ஏற்பாடு நடப்புக்கு வருகிறது. பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் மெய்நிகர் செய்தியாளர் கூட்டம் நேற்று நடந்தது.
அதில் கலந்துகொண்ட சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகள் துறை இயக்குநர் கென்னத் மாக், ஓமிக்ரான் சூழ்நிலை டெல்டாவைபோல் இல்லை என்று கூறினார்.

