முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட நீண்டகால அனுமதிதாரர்கள் பெற வேண்டிய நுழைவு அங்கீகார தேவை ஏற்பாடு பிப்ரவரி 21 முதல் அகற்றப்படும்.
இருந்தாலும் இதில் வேலை அனுமதிசீட்டு ஊழியர்கள் (ஒர்க்பர்மிட்) சேர்க்கப்படமாட்டார்கள்.
அதாவது, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப்பாதைத் திட்டத்தின் வழி சிங்கப்பூருக்கு வருகின்ற நீண்டகால அனுமதிதாரர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டிய தேவை இராது.
அந்தப் பாதையில் வராதவர்கள் நுழைவு அனுமதிக்கு மனுசெய்ய வேண்டாம்.
இருந்தாலும் இத்தகைய பயணிகள் நடப்பில் இருக்கும் குடிநுழைவு நிபந்தனைகளையும் சுகாதார நடைமுறைகளையும் நிறைவேற்ற வேண்டி இருக்கும்.
எம்பிளாய்மெண்ட் பாஸ், எஸ் பாஸ், சார்ந்திருப்போர் அனுமதி போன்ற நீண்டகால அனுமதிதாரர்களுக்கு உரிய இந்தப் புதிய நடைமுறைகள் பிப்ரவரி 21 இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வரும்.

