வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளுக்கும் தனியார் வீடுகளுக்குமான வாடகை கடந்த மாதமும் அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூரின் ஊழியர் சந்தை மேம்பட்டுள்ளதும் எல்லைக் கட்டுப்பாடுகளைச் சிங்கப்பூர் தளர்த்தி வருவதும் இந்த அதி கரிப்புக்கு முக்கிய காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வருவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதால் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக சொத்துச் சந்தை நிபுணர்கள் கூறினர்.
கூட்டுரிமை வீடுகளின் வாடகை கடந்த மாதம் 1.6 விழுக்காடு அதிகரித்தது என்று சொத்துச் சந்தை நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் கூறின. அதேபோல வீவக வீடுகளின் வாடகை சென்ற ஆண்டு டிசம்பரைக் காட்டிலும் ஜனவரியில் 1.2 விழுக்காடு அதிகரித்தது.
சொத்துச் சந்தை நிறுவனங்
களான '99.கோ', 'எஸ்ஆர்எக்ஸ்' ஆகியவை புதன்கிழமை (பிப்ரவரி 16) அன்று வெளியிட்ட முன்னோட்ட மதிப்பீட்டுத் தகவல்கள் இதைத் தெரிவித்தன.
வீவக வீடுகளின் வாடகை 19 மாதங்களாகத் தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளதாக மதிப்பீடுகள் காட்டின. முதிர்ச்சியடைந்த குடியிருப்புப் பேட்டைகளில் வீவக வீட்டு வாடகை கடந்த மாதம் 2.9 விழுக்காடு அதிகரித்தது. அதேநேரம், முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகளில் வாடகை 0.5 விழுக்காடு குறைந்தது.
அங் மோ கியோ, பிடோக், பீஷான், புக்கிட் மேரா, புக்கிட் தீமா, கிளமெண்டி, கேலாங், காலாங், மரீன் பரேட், பாசிர் ரிஸ், குவீன்ஸ்
டவுன், சிராங்கூன், தெம்பனிஸ், தோ பாயோ ஆகியன முதிர்ச்சி அடைந்த குடியிருப்புப் பேட்டைகள்.
புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங், சுவா சூ காங், ஹவ்காங், ஜூரோங் வெஸ்ட், பொங்கோல், செம்பவாங், செங்காங், தெங்கா, போன்றவை முதிர்ச்சி அடையாத குடியிருப்புப் பேட்டைகள்.
ஆண்டுக்காண்டு அடிப்படையிலான கூட்டுரிமை வீடுகளின் வாடகை 2021 ஜனவரியைக் காட்டிலும் இந்த ஜனவரியில் 11.2 விழுக்காடு கூடியது.
கூட்டுரிமை வீடுகளில் வாட கைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் ஜனவரியில் 3.9 விழுக்காடு அதிகரித்தது. டிசம்பரில் 4,472 கூட்டுரிமை வீடுகள் வாடகைக்கு விடப்பட்ட நிலையில் கடந்த மாதம் அந்த எண்ணிக்கை 4,646 ஆக உயர்ந்தது.
தேவை கூடுவதால் வீவக வீடுகளின் வாடகை 1.2% அதிகரிப்பு

