சில்வியா லிம் கருத்துக்கு நாடாளுமன்றம் பதில்

சில்வியா லிம் கருத்துக்கு நாடாளுமன்றம் பதில்

1 mins read
7e205e44-69ff-41f1-9b14-ee13e5852e4f
-

சிறப்­பு­ரி­மைக் குழு விசா­ர­ணைக்கு வந்­த­வர்­க­ளி­டம் 'அடக்­கு­முறை' விதி­கள் பின்­பற்­றப்­பட்­ட­தாக பாட்­டா­ளிக் கட்­சித் தலை­வர் சில்­வியா லிம் தெரி­வித்த கருத்­துக்கு நாடா­ளு­மன்ற அலு­வ­லர் பதி­ல­ளித்து உள்­ளார்.

பாட்­டா­ளிக் கட்­சி­யின் ரயீசா கான் நாடா­ளு­மன்­றத்­தில் பொய்­யு­ரைத்த விவ­கா­ரம் தொடர்­பான சிறப்­பு­ரி­மைக் குழு சமர்ப்­பித்த அறிக்கை மீதான விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய திரு­வாட்டி லிம், தம்­மி­ட­மும் தமது கட்­சி­யின் இதர இரு தலை­வர்­களிடமும் கடு­மை­யான விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

திரு பிரித்­தம் சிங்­கி­டம் 9 மணி நேர­மும் திரு ஃபைசால் மனாப்­பி­டம் 6 மணி நேர­மும் தம்­மி­டம் 3 மணி நேர­மும் விசா­ரணை நடத்­தப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார். மேலும், விசா­ர­ணைக்­காக பாது­காக்­கப்­பட்ட அறை­யில் தாம் இரு நாள்­கள் காத்­தி­ருந்­த­தா­க­வும் எந்­த­வொரு தொடர்பு சாத­னத்­தை­யும் பயன்­ப­டுத்த தமக்கு அனு­மதி தரப் பட­வில்லை என்­றும் அவர் கூறி னார். அவ­ருக்­குப் பதி­ல­ளித்­துள்ள நாடா­ளு­மன்ற அலு­வ­லர், சாட்­சி­யம் அளிக்க வரு­வோர் தொடர்பு சாத­னங்­க­ளை­யும் இதர மின்­னி­லக்க சாத­னங்­க­ளை­யும் பயன்படுத்த வேண்­டாம் என அறி­வு­றுத்­தப்­ப­டு­வது வழக்­கம் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.