முதன்முறையாக 7,000 பேரை திரட்டும் வர்த்தகக் கண்காட்சி

முதன்முறையாக 7,000 பேரை திரட்டும் வர்த்தகக் கண்காட்சி

1 mins read
110ffce0-db41-48da-b691-47a3e2eb41c3
-

ஆசிய பசி­பிக் கடல்­துறை கண்­காட்சி நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக அடுத்த மாதம் நடை­பெற உள்­ளது. தென்­கி­ழக்கு ஆசி­யா­வின் ஆகப்­பெ­ரிய வர்த்­த­கக் காட்­சி­யான 'ஆசிய பசி­பிக் மரி­டைம்' மரினா பே சேண்ட்­ஸில் மார்ச் 16 முதல் மார்ச் 18 வரை மூன்று நாட்­கள் நடை­பெ­றும்.

கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லுக்­குப் பின்­னர் பெரிய அள­வில் நேர­டி­யாக நடை­பெற இருக்­கும் கண்­காட்­சி­யில் பங்­கேற்க உல­கம் முழு­வ­தும் இருந்து 7,000க்கும் மேற்­பட்­டோர் வரு­வார்­கள் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. வரு­கை­யா­ளர்­கள் அனை­வ­ரும் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டி­ருப்­ப­தோடு ஒவ்­வொரு நாளும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­கும் முன்­னர் பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும். அவர்­க­ளுக்­கா­னப் பரி­சோ­தனை இல­வ­ச­மா­கச் செய்­யப்­படும்.

இந்த ஆண்­டில் இங்கு நடத்­து­வ­தற்கு அனு­ம­திக்­கப்­பட்ட இரண்டு அனைத்­து­ல­கக் கண்­காட்­சி­களில் ஒன்று இந்­தக் கடல்­துறை கண்­காட்சி. மற்­றொன்று, தற்­போது சாங்கி கண்­காட்சி மையத்­தில் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் சிங்­கப்­பூர் வான்­வெ­ளிக் கண்­காட்சி.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வைச் சேர்ந்த வர்த்­த­கர்­க­ளு­டன் அனைத்­து­லக கடல்­துறை பொருள் விற்­ப­னை­யா­ளர்­களை இணைக்­கும் நிகழ்­வாக கடல்­துறை கண்­காட்சி அமை­யும்.

இதற்கு முன்­னர், கொவிட்-19 தொற்று கண்­ட­றியப்­ப­டாத 2018ஆம் ஆண்டு நடை­பெற்ற கண்­காட்­சி­யில் கிட்­டத்­தட்ட 14,000 பேர் நேர­டி­யா­கப் பங்­கேற்­ற­னர். 60 நாடு­

க­ளைச் சேர்ந்த 1,432 காட்­சிக்­

கூ­டங்­கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இவ்­வாண்டு 20 நாடு­க­ளைச் சேர்ந்த 250 காட்­சிக்கூடங்­கள் மட்­டுமே இடம்­பெற உள்­ளன.