செல்லப் பிராணிகளை வளர்க்க உரிமம் பெறாதவர்களிடம் இருந்து இம்மாதம் 9ஆம் தேதி முதல் 19 நாய்கள் மீட்கப்பட்டு விலங்கு, கால்நடை மருத்துவ சேவை பராமரிப்பில் விடப்பட்டுள்ளன. உரிமம் பெறாமல் நாய்களை வளர்ப்பதும் அவற்றை விற்
பதும் நடைபெறுவதாக பொதுமக்களிடம் இருந்து வரப் பெற்ற தகவலைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இச்சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரிட மும் அவரது கணவரிடமும் விசாரணை நடக்கிறது.
உரிமம் இன்றி விற்கும் நோக்கில் விலங்குகளை அடைத்து வைப்பது குற்றம். இதற்கு $5,000 வரையிலான அபராதம், 6 மாதம் வரை
யிலான சிறைத் தண்டனை ஆகியன விதிக்கப்படலாம்.

