இரண்டாம் உலகப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் வருங்காலத்தில் அதன் தொடர்பிலான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளக்கூடியோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அதனால் வருங்காலத் தலைமுறையினருக்கு முழுமைத் தற்காப்பின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லும் முறையை மாற்றவேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் கூறியுள்ளார்.
தேசிய அரும்பொருளகத்தில் அமைந்துள்ள 'டிஸ்லொக்கேஷன்ஸ்: மெமரி அண்ட் மீனிங் ஆஃப் தி ஃபால் ஆஃப் சிங்கப்பூர், 1942' எனும் இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைச் சித்திரிக்கும் கண்காட்சிக்குச் சென்றபோது டாக்டர் இங் பேசினார்.
1942ஆம் ஆண்டு இரண்டாம் பிப்ரவரி மாதம் 15ஆம் தேதியன்று சிங்கப்பூர் ஜப்பானியர்களின் பிடிக்குச் சென்றது. இந்நிகழ்வின் 80ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்க இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் பிப்ரவரி 15ஆம் தேதியன்று சிங்கப்பூர் முழுமைத் தற்காப்பு தினத்தை அனுசரித்து வருகிறது.
தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சமூகத்தின் எல்லா பிரிவினரும் பங்காற்றவேண்டும் என்பதை வலியுறுத்துவது இதன் இலக்கு.
20 ஆண்டுகளுக்குப் பிறகு 2042ஆம் ஆண்டு, சிங்கப்பூர் ஜப்பானியர்களின் பிடிக்குச் சென்ற 100வது ஆண்டு நினைவுகூரப்படும். அப்போது ஆதிக்கத்தை அனுபவித்த எவருமே இல்லாமல் போய்விடலாம். ஜப்பானியர் ஆதிக்கத்தை அனுபவித்த எவருமே இல்லாது போய்விடலாம்.
நினைவுகூரலில் அவர்களால் பங்கேற்க முடியாது என்பது இந்தக் கண்காட்சியின் இறுதி அங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

