கொவிட்-19 சூழலால் ஏற்படக்கூடிய பாதிப்பைத் தளர்த்த கடந்த ஈராண்டுகளில் எட்டு வரவுசெலவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவை சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் கைகொடுத்ததுடன் சிங்கப்பூர் வாசிகளிடையிலான வேலையின்மை விகிதத்தைக் குறைத்தன.
சென்ற ஆண்டு சிங்கப்பூரின் பொருளியல் 7.6 விழுக்காடு வளர்ச்சியடைந்ததும் நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. ஆதரவுத் திட்டங்கள் இல்லாமல் இருந்திருந்தால் பொருளியல் வளர்ச்சி 6.8 விழுக்காடாக இருந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2020ஆம் ஆண்டு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 விழுக்காடு குறைந்தது. ஆதரவுத் திட்டங்கள் இல்லாதிருந்தால் விகிதம் 10.7 விழுக்காடு சரிந்திருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டது.
சிங்கப்பூர் வாசிகளைிடையே வேலையின்மை விகிதம் 2020ஆம் ஆண்டு 6.1 விழுக்காடாகவும் சென்ற ஆண்டு 7.5 விழுக்காடாகப் பதிவாகியிருக்கலாம் என்றும் நிதி அமைச்சு கணித்தது.
ஆனால், 2020ஆம் ஆண்டு வேலையின்மை விகிதம் 4.1 விழுக்காடாகப் பாதிவானது. சென்ற ஆண்டு இந்த விகிதம் 3.5 விழுக்காடாக இருந்தது.

