சிங்கப்பூரின் எதிர்க்கட்சிகளில் ஒன்றான சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முக்கிய புள்ளி ஒருவர் கட்சிப் பொறுப்பிலிருந்து விலகிஉள்ளார்.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட அக்கட்சியின் ெபாதுத் தொடர்பு பிரிவின் தலைவரான அவர், கட்சி யில் இருந்து வெளியேறுவார் எனவும் கூறப்படுகிறது.
மக்கள் செயல் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டான் செங் போக்கால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியிலிருந்து முக்கிய புள்ளி ஒருவர், பதவி விலகுவது இது இரண்டாவது முறையாகும்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் பேசிய 51 வயது குமரன் பிள்ளை, தான் பொதுத் தொடர்பு தலைவர் மற்றும் பேச்சாளர் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை கட்சித் தலைவர் ஃபிரான்சிஸ் யுவென்னிடம் தெரிவித்து விட்டதாகக் கூறினார்.
திரு பிள்ளை, 2020ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் கெபுன் பாரு தனித் தொகுதியில் போட்டியிட்டவர். மத்திய நிர்வாகக் குழுவிலிருந்தும் விலகுவது குறித்தும் கட்சித் தலைமையிடம் அவர் பேசி வருகிறார். குறிப்பிடப்படாத காலம் வரை விடுமுறையில் செல்ல அவர் அனுமதி ேகட்டுள்ளார்.
திரு யுெவன்னை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டு கேட்டபோது, மத்திய நிர்வாகக் குழுவில் அவர் தொடர்ந்து நீடிப்பார் என்று கூறினார்.
திரு பிள்ளையின் கட்சி உறுப்பினர் பதவி கடந்த ஜனவரியில் காலவதியானது. பத்து வெள்ளி கட்டணம் செலுத்தி அதனை அவர் புதுப்பிக்க வேண்டும். அதற்கு அவருக்கு ஆறு மாத காலம் அவகாசம் உள்ளது.
புதிய நிறுவனங்களை நிர்வகிக்கவும் மேம்படுத்தவும் திரு பிள்ளை ஆலோசனை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
கட்சித் தலைவரான டாக்டர் டானை இன்று சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து திரு பிள்ளை முடிவு செய்யவிருப் பதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. கடந்த அக்டோபரில் பொருளாளர் கேய்லா லோ பதவி விலகினார். இதற்கு முன்பு கடந்த தேர்தலில் போட்டியிட்ட பிராட் போவ்யெர் பதவி விலகியுள்ளார்.

