முதியவர் தவறி விழுந்தது குறித்து மரண விசாரணை

முதியவர் தவறி விழுந்தது குறித்து மரண விசாரணை

2 mins read
7bb9588b-415b-4532-95e9-e729e566959e
-

பொருட்­களை விநி­யோ­கிக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்த 74 வயது முதி­ய­வர் தவறி விழுந்து இறப்­ப­தற்கு சாய்­வுப் பாதை என்று எண்ணி அவர் ஏறி­யி­ருக்­க­லாம் என்று மரண விசா­ர­ணை­யில் தெரிய வரு­கிறது.

மனி­த­வள அமைச்­சின் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரப் பிரி­வின் அதி­காரி ஒரு­வர் நேற்று திரு டான் பிங் லிம் மர­ணம் குறித்த விசா­ர­ர­ணை­யின் முதல் நாளில் சாட்­சி­யம் அளித்­தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தெம்­ப­னி­சில் உள்ள செஞ்­சுரி ஸ்குவேர் மால் கடைத் ெதாகுதியில் பொருள்­களை ஏற்­றும் பகு­தி­யில் தள்­ளு­வண்­டியை திரு டான் பின்­னோக்கி இழுத்­துச் சென்று கொண்­டி­ருந்­தார். அப்­போது அவர் ஒரு மீட்­டர் உயர மேட்­டி­லி­ருந்து கீழே விழுந்­தார்.

மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்ட அவர் அங்கு பலத்த தலைக் காயம் கார­ண­மாக மரண மடைந்­தார். மனி­த­வள அமைச்­சின் மூத்த விசா­ரணை அதி­காரி ­யான அப்­துல் ரஹ்­மான் முஹ­மட் யாத்திம், டான் வேலை செய்த நிறு­வ­ன­மான ஏஎஸ்டி லாஜிஸ்­டிக்ஸ் அந்த இடத்­தின் ஆபத்து குறித்து மதிப்பிட­வில்லை என்­றார். ஆபத்து மற்­றும் பாது­காப்பு குறித்து மர­ண ­ம­டைந்­த­வ­ருக்கு தெளி­வாக விளக்­கப்­ப­ட­வில்லை என்­றும் அவர் சொன்­னார்.

திரு டான், ஏஎஸ்டி லாஜிஸ்­டிக்ஸ் நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றிய நான்கு நாட்­களில் விபத்தில் சிக்கினார்.

மரண விசாரணை அதிகாரி யான ஆதம் நக்கோடா, தாழ் வாரத்தை சாய்வுப் பாதை என்று எப்படி டான் நினைத்தார் என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த திரு அப்துல் ரஹ்மான், மேடை கட்டுப்பாடுகளை அவர் பயன் படுத்தவில்லை, விளிம்பில் இருப்பதையும் அவர் கவனிக்க வில்லை என்று சொன்னார்.